டெல்லி: 2014ஆம் நிதியாண்டின் இறுதியில் நாட்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகப்படியாக இருந்ததன் காரணமாக நிதியமைச்சகம் தங்க இறக்குமதியை குறைக்க பல முயற்சிகள் செய்தது. இதன் ஒரு பகுதியாக தங்க மற்றும் வெள்ளி இறக்குமதியின் மீது அதிகப்படியான சுங்க வரி வதித்தது.
இதன் எதிரொலியாக நாட்டில் நாட்டில் நிதி பற்றாக்குறை 22 பில்லியன் டாலர் தொகை தற்போது 10 பில்லியன் டாலராக குறைந்துள்ளது குறிப்பிடதக்கது. ஆனால் சுங்க வரி அதிகரிப்பால் தங்கக் கடத்தல் அதிகரித்துள்ளது.
ஒரு வருடம்
2013-14ஆம் நிதியாண்டு காலகட்டத்தில் 148 கடத்தலில் சுமார் ரூ.245 கோடி மதிப்பிலான தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்யப்பட்டுள்தாக தகவல் தெரிவித்துள்ளது.
40 கடத்தல்
அதேபோல் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டு காலகட்டத்தில் வெறும் 40 திருட்டுகள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம். இந்த சுங்க வரி உயர்வு நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்தாலும் கடத்தல் போன்ற தவறான செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
டெல்லி ஏர்போர்ட்
மேலும் இத்தகைய கடத்தல் டெல்லி ஏர்போர்ட்டில் அதிகளவில் நடப்பதாக தெரிகிறது. 2013-14ஆம் ஆண்டு காலத்தில் சுமார் 363 வழக்குகளில் 353 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உண்மை
இத்தகைய கடத்தல்களில் கிடைத்த தங்கத்தின் மதிப்பு மட்டும் ரூ.245 கோடி, சோதனையில் கிடைக்காத தங்கத்தின் மதிப்பு இதைவிட 10 மடங்கு மேல் இருக்கும். மேலும் இத்தகைய திருட்டுகள் அதிகாரிகள் துணையுடன் சிலவும் நடக்கிறது.பல நடக்கிறது.