டெல்லி: இந்தியாவில் புல்லட் ரயில்களை நிறுவ ஜப்பான் அரசு இந்தியாவிற்கு 1 சதவீதத்திற்கும் குறைவான வட்டி விகிதத்தில் சுமார் 15 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கிறது.
உலகின் 4வது மிகப்பெரிய ரியல் போக்குவரத்துத் தளத்தில் புல்லட் ரயில்களை அமைக்கும் பணியில் பல நாடுகள் போட்டி போட்டு வருகிறது, இதில் ஜப்பான் உட்படச் சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அடங்கும்.
டோக்கியோ..
இந்தியாவில் மும்பை மற்றும் அகமதாபாத் வழித்தடத்தில் 505 கிலோமீட்டர் வரையிலான தூரத்திற்குப் புல்லட் ரயில் மற்றும் தடங்களை அமைக்கும் பணியில் டோக்கியோ நிறுவனம் இறங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அனைத்துத் திட்டங்களுமே டென்டர் முறையில் செயல்படுத்தப்பட்டன.
சீனா நிறுவனங்கள்
இந்நிலையில் சீன நிறுவனம் டெல்லி மற்றும் மும்பை வழித்தடத்தில் 2 புல்லட் ரயில் மற்றும் ரயில் பாதைகளை அமைக்கத் திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
15 பில்லியன் டாலர்
ஜப்பான் அரசின் 15பில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் இந்தியாவில் புல்லட் ரயில் போக்குவரத்தில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் உள்ளகட்டமைப்பு மேம்படுத்தும் பணியில் ஜப்பான் ஏற்கனவே அறிவித்திருந்த நிதியுதவிகளில் இந்த 15 பில்லியன் டாலர் ஒரு பகுதியாகும். மேலும் இத்திட்டங்களில் சீனாவும் நிதியுதவி அளிப்பதாக மோடியின் சீன பயணத்தில் உறுதியளித்திருந்தது.
இந்திய ரயில்வே துறை
15 பில்லியன் டாலர் நிதியுதவி குறித்து இந்திய ரயில்வே துறையின் தலைவர் ஏ.கே.மிட்டல் கூறுகையில், "சந்தையில் பல நாடுகள் ஹய் ஸ்பீடு டெக்னாலஜிகளில் சிறந்து விளங்கினாலும், நிதியுதவியுடன் கிடைக்கும் ஒரே டெக்னாலஜி ஜப்பான் தான்" என அவர் தெரிவித்துள்ளார்.
30 சதவீதம்
இந்த நிதியுதவியின் மூலம் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவை இணைக்கும் 'Diamond Qaudrilateral' திட்டத்தின் 10,000 கிலோமீட்டர் வழிதட்டத்திற்குத் தேவையான 30 சதவீத உபகரணங்களை இந்தியா ஜப்பான் நாட்டு நிறுவனங்களிடம் இருந்த பெற உள்ளது.


Click it and Unblock the Notifications