மும்பை: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் ஆப்பிள், இந்திய சந்தையில் முதல் முறையாக 1 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் முதல் முறையாக 1 பில்லியன் டாலர் விற்பனை வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாகப் புதன்கிழமை ஆப்பிள் நிறுவனம், நிறுவன பதிவகத்திற்கு (RoC) சமர்ப்பித்த அறிக்கையில் அறிவித்திருந்தது.
விற்பனை 44% உயர்வு
ஐபோன் மற்றும் ஐபேட் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், இந்திய சந்தையில் பல வருடங்களாக இயங்கி வந்தாலும், கடந்த சில வருடங்களாக மட்டுமே இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்து வருகிறது.
இதன் படி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை அளவுகள் சுமார் 44 சதவீதம் அதிகரித்து 6,472.89 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையைப் பெற்றுள்ளது.
கடந்த வருடம் இதன் அளவு 4,500.35 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
லாபம்
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவு 242.85 கோடி ரூபாயாக உயர்ந்து இரட்டிப்பாகியுள்ளது.
அதிரடி ஆஃபர்
நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனத்தின் புதிய வெளியீடான ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் போன்களின் விற்பனையை அதிகரிக்கப் புதிய விற்பனை கிளைகள், புதிய மார்கெட்டிங் யுத்திகள், அதிரடியான விளம்பரங்கள் என அசத்தியுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் பைபேக் திட்டம், ஈஎம்ஐ மற்றும் தள்ளுபடி திட்டங்கள் மூலம் இதன் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.
தேவைகள் எண்ணிக்கை அதிகரிப்பு
மேலும் இந்திய சந்தையில் ஒவ்வொரு காலாண்டிலும் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் தேவை சுமார் 35 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.
ஆப்பிள் இந்தியா
ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய கிளையில் 99 சதவீத பங்குகள் மற்றும் கட்டுப்பாடு உரிமைகள் என அனைத்தும் ஆப்பிள் ஆப்ரேஷன்ஸ் இண்டர்நேஷ்ன்ஸ் நிறுவனத்திடமும், 1% மட்டும் ஆப்பிள் ஆப்ரேஷன்ஸ் ஐரோப்பாவிடம் உள்ளது.
2011ஆம் ஆண்டு முதல்..
இந்திய சந்தையில் அதன் வர்த்தகம் மற்றும் விற்பனைக்கான திட்ட வடிவங்களை ஆப்பிள் நிறுவனம் 2011ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் மாற்றியமைத்தது.
இந்திய சந்தை
சுமார் 9 சதவீத சந்தை வர்த்தகத்துடன் இந்திய மொபைல் விற்பனை சந்தையில் ஆப்பிள் நிறுவனம் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சாம்சங் மற்றும் மைக்ரோமாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications