மும்பை: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் ஆப்பிள், இந்திய சந்தையில் முதல் முறையாக 1 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் முதல் முறையாக 1 பில்லியன் டாலர் விற்பனை வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாகப் புதன்கிழமை ஆப்பிள் நிறுவனம், நிறுவன பதிவகத்திற்கு (RoC) சமர்ப்பித்த அறிக்கையில் அறிவித்திருந்தது.
விற்பனை 44% உயர்வு
ஐபோன் மற்றும் ஐபேட் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், இந்திய சந்தையில் பல வருடங்களாக இயங்கி வந்தாலும், கடந்த சில வருடங்களாக மட்டுமே இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்து வருகிறது.
இதன் படி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை அளவுகள் சுமார் 44 சதவீதம் அதிகரித்து 6,472.89 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையைப் பெற்றுள்ளது.
கடந்த வருடம் இதன் அளவு 4,500.35 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
லாபம்
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவு 242.85 கோடி ரூபாயாக உயர்ந்து இரட்டிப்பாகியுள்ளது.
அதிரடி ஆஃபர்
நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனத்தின் புதிய வெளியீடான ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் போன்களின் விற்பனையை அதிகரிக்கப் புதிய விற்பனை கிளைகள், புதிய மார்கெட்டிங் யுத்திகள், அதிரடியான விளம்பரங்கள் என அசத்தியுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் பைபேக் திட்டம், ஈஎம்ஐ மற்றும் தள்ளுபடி திட்டங்கள் மூலம் இதன் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.
தேவைகள் எண்ணிக்கை அதிகரிப்பு
மேலும் இந்திய சந்தையில் ஒவ்வொரு காலாண்டிலும் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் தேவை சுமார் 35 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.
ஆப்பிள் இந்தியா
ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய கிளையில் 99 சதவீத பங்குகள் மற்றும் கட்டுப்பாடு உரிமைகள் என அனைத்தும் ஆப்பிள் ஆப்ரேஷன்ஸ் இண்டர்நேஷ்ன்ஸ் நிறுவனத்திடமும், 1% மட்டும் ஆப்பிள் ஆப்ரேஷன்ஸ் ஐரோப்பாவிடம் உள்ளது.
2011ஆம் ஆண்டு முதல்..
இந்திய சந்தையில் அதன் வர்த்தகம் மற்றும் விற்பனைக்கான திட்ட வடிவங்களை ஆப்பிள் நிறுவனம் 2011ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் மாற்றியமைத்தது.
இந்திய சந்தை
சுமார் 9 சதவீத சந்தை வர்த்தகத்துடன் இந்திய மொபைல் விற்பனை சந்தையில் ஆப்பிள் நிறுவனம் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சாம்சங் மற்றும் மைக்ரோமாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications