டெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள பல வளர்ச்சி திட்டங்களுக்கு ஜப்பான் அரசு சுமார் 242.2 பில்லியன் ஜப்பான் யென் நிதியைக் கடனாக அளித்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பீட்டில் அதன் மதிப்பு 14,251 கோடி ரூபாயாகும். இந்த நிதியுதவியில் பெரும் பகுதி ஜார்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம் மற்றும் வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களுக்குச் செலவிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 1958ஆம் ஆண்டு முதலே இந்தியா ஜப்பான் நாடுகள் மத்தியில் நட்புறவு மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த நட்புறவில் மேலும் ஒரு படியாக இருநாடுகளின் வளர்ச்சியில் அதிகளவிலான அக்கறை கொண்டு நிதியுதவி மட்டும் அல்லாமல் பல சிறப்புத் திட்டங்களை வடிவமைப்பதில் உதவியுள்ளது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் ஜப்பான் அரசு, சுமார் 390 பில்லியன் ஜப்பான் யென் மதிப்பிலான நிதியுதவிக்கு உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications