அதிகவேக எலக்ட்ரிக் கார்களைத் தாயரிக்கும் முன்னணி நிறுவனமான டெஸ்லா, அமெரிக்காவிற்கு அடுத்தாக வெளிநாட்டில் அதாவது ஆசிய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் புதிய தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டது.
இதற்காக டெஸ்லா நிர்வாகம் முதலில் தேர்வு செய்தது இந்தியாவும், சீனாவும் தான். இந்திய அரசு பல்வேறு சலுகையை அளித்தும் கடைசி நேரத்தில் டெஸ்லா சீனாவில் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது விட்டது.
எப்போதும் கதவு திறந்திருக்கும்..!
இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி ஒரு பேட்டியில், "இப்பவும் டெஸ்லா இந்தியாவிற்கு வந்தாலும் வரவேற்கத் தயாராக உள்ளோம், தொழிற்சாலைக்குத் தேவையான நிலம் மற்றும் இதர உதவுகளம் செய்யத் தயார்" எனக் கூறியுள்ளார்.
டெஸ்லாவின் பதில்..
இதற்கு டெஸ்லா நிறுவனம் தற்போது இந்தியாவிற்கு வர எந்தத் திட்டமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
டெஸ்லா இந்தியாவிற்கு வந்திருந்தால் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருந்திருக்கும் வேலைவாய்ப்பு, வர்த்தகம், வருவாய் என எல்லா விதத்திலும் இது லாபமாக இருக்கும்.
சீனா
கடந்த வருடம் ஷாங்காய் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிபெற்றதை அடுத்தச் சீனாவில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
இந்தியாவில் டெஸ்லா வராத நிலையில், தற்போது எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்திற்கு இது மகிப்பெரிய வர்த்தக வாய்ப்பாக அமைந்துள்ளது.
உலக முதலீட்டாளர்கள்
சமீபத்தில் டாவோஸ் நகரத்தில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் சிவப்புக் கம்பளம் கொண்டு வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு அடித்தது ஜாக்பாட்


Click it and Unblock the Notifications