சென்னை : மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசா களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் நாசாவுடன் இணைந்து நிலவுக்கு மனிதனை அனுப்ப உதவுவதற்கு தேர்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் பெங்களூருவைச் சேர்ந்த TeamIndus என்ற நிறுவனமும் இடம் பெற்றுள்ளது கவனிக்கதக்கது.
இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவெனில் இதன் வேலை வடிவமைப்பு மட்டுல் இல்லையாம், அதற்கான நிலவில் நிறுத்தும் லேண்டரையும் வடிவமைக்கும் பணியினையும் கொடுத்துள்ளதாம். ஆமாங்க.. ஒரு விண்ணில் தரையிறக்கப்படும் விண்கலம் உருவாக்கத்திற்கு தான் உதவி புரிய போகிறதாம் இந்த இந்திய நிறுவனம்.
அடுத்தாண்டு செப்டம்பரில் இந்த விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம். அதோடு 21ம் நூற்றாண்டில் நிலவில் தரையிறக்கப்படும் இந்த விண்கலமானது, நாசாவின் புதிய வடிவமைப்பாகும். அதோடு இந்த திட்டத்திற்கான செலவு 250 மில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களுடன் TeamIndus
இவ்வாறு வடிவமைக்க உள்ள இந்த விண்கல வடிவமைப்பிற்கு நாசா மூன்று நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோபாட்டிக் (Astrobatic), அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு நிறுவனமான Intuitive Machines, இந்தியாவை சேர்ந்த TeamIndus உள்ளிட்ட மூன்று நிறுவனங்களும் நாசாவுடன் இணைந்து வேலை பார்க்கப் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனவாம்.
$97 மில்லியனுக்கு ஒப்பந்தம்
இதில் இந்தியாவைச் சேர்ந்த TeamIndus நிறுவனம் உபகரணங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமானங்கள் பிரிவில் வேலை செய்ய போகின்றதாம். ஆமாங்க.. இதற்கு இந்த நிறுவனத்திற்கு 97 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாம்.
Google XPrize Lunar இறுதி போட்டியாளர்
கடந்த 2010ல் ராகுல் நாராயணனால் நிறுவப்பட்ட TeamIndus நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் $30 million Google XPrize Lunar போட்டியிலும் இறுதியாளாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பக்க பலமாக பல தலைவர்கள்
அதோடு மட்டும் இல்லையாம் இந்த நிறுவனத்திற்கு இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலக்கனி, டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைவர் சச்சின் மற்றும் பின்னி பன்சல் ஆகியோரும் இந்த நிறுவனத்திற்கு பக்க பலமாக இருக்கின்றனராம்.
காத்திருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் காத்திருக்கு
இந்த நாசா இதோடு மட்டும் அல்ல, அடுத்தடுத்த 2024 மற்றும் 2028 வருடங்களில் மனிதர்களை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளதாம். அதோடு விண்வெளி மையத்தில் ஒரு மனிதனுக்கான நிரந்தர தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாம். ஆக இந்த அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் நாசாவோடு இணைந்து இந்த இந்திய நிறுவனமும் நிலவில் கலக்க போகின்றன.