டெல்லி: அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையால், உலக நாடுகளின் பொருளாதாரம் என்னவோ பாதிக்கப்படுவதாகக் கருதப்பட்டு வந்தாலும், இந்தியாவைப் பொறுத்த வரையில் இந்த பிரச்சனை எதிர்மறையாகவே இருந்து வருகிறது.
இந்த இரு நாடுகளின் வர்த்தக பிரச்சனையால் மாறி மாறி வர்த்தக வரிகளை உயர்த்திக் கொண்டே செல்கின்றன. இந்த இரு நாடுகளின் பிரச்சனை, ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல தான், இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது.
இந்த இரு நாடுகளின் வர்த்தக பிரச்சனை ஒரு புறம் மனவேதனை அளித்தாலும் மறுபுறம் இந்தியாவுக்கு பல நன்மைகளையே செய்து வருகிறது. குறிப்பாக பல ஏற்றுமதி வாய்ப்புகளை அள்ளித் தருகிறது.
ஆமாங்க.. அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் வர்த்தக பிரச்சனையால், இந்த இரு நாடுகளுக்கு சுமார் 350 பொருட்களுக்கு வர்த்தக வாய்ப்பை அதிகரிக்கலாம் என்றும் வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.
சீனா மனசாட்சியே இல்லாமல் நடந்து கொள்வதாக, அதாவது அதிக வரியுடன் பொருட்களை இறக்குமதி செய்வதாக அமெரிக்காவும், நாங்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறோம் என்று சீனாவும், மறு புறம் மாறி மாறி வரி விதித்துக் கொள்கின்றன.
இந்த நிலையில் இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்றுமதி இறக்குமதி செய்து ஏராளமான பொருட்களின் வணிகம் தற்போது பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்து வந்த டீசல் இன்ஜின்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், காப்பர் தாதுக்கள், எக்ஸ்ரே குழாய்கள் மற்றும் சைலீன், இன்வெர்ட்டர்கள் உள்ளிட்ட பல குறிப்பிட்ட பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு இந்த வகையில் 151 பொருட்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும், இதுவே சீனாவுக்கு கிட்டதட்ட 203 பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் இந்தியா எதிர்பார்க்கிறது.
இந்த நிலையில் அமெரிக்கா சீனா பிரச்சனையால் சீனாவின் உற்பத்தி மற்றும் மருந்து ஏற்றுமதிக்கு சாதகாமான சந்தை அணுகலை எதிர்பார்த்து வருகிறது. அதோடு தனது உற்பத்தி தளத்தையும் வேறு இடங்களுக்கு மாற்ற எத்தனித்து வருகின்றதாம்.
இவ்வாறு இந்த இரு நாடுகளிலும் நிலவி வரும் ஏற்றுமதி இறக்குமதி பிரச்சனையால் சுமார் 350 பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனவாம் என்றும் கருதப்படுகிறது.