இந்தியாவில் தற்போது தான் கொரோனாவின் தாக்கம் சற்றே ஓய்ந்துள்ள நிலையில், பல நிபுணர்களும், நிறுவங்களும் மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை விடுத்து வருகின்றனர்.
இதன் தாக்கம் ஒரு புறம் பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தாது என சிலர் கூறினாலும், மக்கள் மத்தியில் முதல், இரண்டாம் அலையின் போதே மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது அலை என்ன செய்ய போகிறதோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
மூன்றாம் கட்ட பரவல் தாக்கம்
முதல் இரண்டாம் அலைகளின் போதே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து, வேலையினை இழந்து, புதிய வேலைகள் கிடைக்காமல் தவித்து வருபவர்கள் பலர். இப்படி இருக்கையில் எஸ்பிஐ தனது ஆய்வறிக்கையில் ஆகஸ்ட் 2021ல் இந்தியாவில் மூன்றாம் கட்ட தாக்கம் இருக்கும்.
செப்டம்பரில் உச்சம் தொடும்
மூன்றாம் அலையானது செப்டம்பரில் அது உச்சம் பெறும் என எஸ்பிஐ தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இரண்டாவது அலை மே 7 அன்று உச்சத்தினை எட்டியது. இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவினை தாக்கியது. இது மே மாதத்தில் மோசமான தாக்கத்தினை எட்டியது, குறிப்பாக டெல்லி, மகாராஷிடிரா, கேரளா மற்றும் சில மா நிலங்களில் லட்சக்கனக்கானோரை பாதித்தது.
கொரோனா பாதிப்பு
மூன்றாம் கட்ட பரவல் என்பது ஜூலை இரண்டாம் வாரத்தில் ஆரம்பிக்கலாம். எனினும் ஆகஸ்ட் நடுத்தர காலத்தில் இன்னும் வழக்குகள் அதிகரிக்க ஆரம்பிக்கும் என்றும் எஸ்பிஐ தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. இந்தியா திங்கட்கிழமையன்று 39,796 பேருக்கு புதியதாக தொற்று உள்ளதாகவும், 42,352 பேர் குணமடைந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 723 பேர் பலியாகியுள்ளநர்.
மொத்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் மொத்தம் 3,05,85,229 பேருக்கு தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கையானது 4 லட்சத்தினையும் தாண்டியுள்ளது. இந்தியாவில் தற்போது 35 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றனர். எப்படியிருப்பினும் மக்கள் பல கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், மூன்றாம் கட்ட தாக்கம் என்பது, பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தாது என்று கூறுவது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக பார்க்கப்படுகிறது.
பொருளாதாரம் என்ன ஆகுமோ?
முதல் கட்ட அலையிலேயே மிக மோசமாக வரலாறு காணாத சரிவினைக் கண்ட பொருளாதாரம், இரண்டாம் கட்ட அலையினால் இன்னும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வரவே இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்ற நிலையில், மூன்றாம் கட்ட பரவல் எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமோ? இது பொருளாதாரத்தில் எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications