பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தற்போது ரஷ்ய இந்தியர்கள் திறமையானவர்கள் மற்றும் மற்றவர்களை வழி நடத்தி செல்லும் திறமையான மக்கள் என பாராட்டியுள்ளார்.
அதோடு இந்தியா வளர்ச்சியில் சந்தேகமின்றி சாதனை படைக்கும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து வருகின்றது. இதனால் உலகளவில் பணவீக்கம் தலைவிரித்தாடி வருகின்றன. இதற்கிடையில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டியை அதிகரித்து வருகின்றன.
சிறந்த வளர்ச்சியினை காணலாம்
இதற்கிடையில் நவம்பர் 4ம் தேதி ஆண்டுதோறும் ரஷ்யாவில் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டி நடந்த விழாவில் கலந்து கொண்ட அதிபர் புதின், இந்தியாவை பாருங்கள். உள்நாட்டு வளர்ச்சிக்கு தேவையான திறமையான மற்றும் மற்றும் கடுமையாக உழைக்க கூடிய மக்களைக் கொண்டுள்ளது. ஆக வளர்ச்சி என வரும்போது நிச்சயம் இந்திய சிறந்த வளர்ச்சியினை காணலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏறக்குறைய 150 கோடி மக்கள் உள்ளனர். அதுவே அவர்களுக்கு பலமாக உள்ளது..
இந்தியா பெருமை கொள்ளலாம்
இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பாராட்டி புதின், மோடியின் தலைமையில் இந்தியா நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. அவர் ஒரு தேசபக்தர், மேக் இன் இந்தியா என்ற அவரது யோசனை பொருளாதார ரீதியாக முக்கியமானது. எதிர்காலம் இந்தியாவுக்கே சொந்தம். அது உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பதில் பெருமை கொள்ளலாம்.
வளர்ச்சிக்கு என்ன காரணம்?
பிரிட்டனின் கீழ் இருந்து தற்போது நவீன நாடாக வளர்ந்துள்ள இந்தியாவின் பொருளாதாரம், பெரிய அளவிலான வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகை மற்றும் திட்டவட்டமான முடிவுகள், இந்தியா மீதான அனைவரின் மரியாதைக்கும் அபிமானத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது.
இந்தியா ரஷ்யா நட்பு குறித்து நெகிழ்ச்சி
இந்தியா, ரஷ்ய உறவு குறித்து பேசியவர், பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பு உறவால் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஒருபோதும் கடினமான பிரச்னைகளை எதிர்கொள்ளவில்லை. எங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆதரவளித்துக் கொண்டுள்ளோம். அது இப்போதும் தொடர்கிறது. எதிர்காலத்திலும் அது தொடரும் என நான் உறுதியாக நம்புகிறேன் என இந்தியா ரஷ்யாவின் உறவு குறித்து கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
மோடிக்கு பாராட்டு
இந்திய விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் உரத்தின் சப்ளையை அதிகரிக்க பிரதமர் மோடி கூறிய நிலையில், அதனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனை பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் பாராட்டி இருப்பது, மேற்கத்திய நாடுகள் மத்தியில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications