இந்தியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் அதேபோல் புதிதாக தொழில் தொடங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இதன் காரணமாக இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகி வருகிறது.
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் எவ்வளவு பணக்காரர்கள் இருப்பார்கள் என்பது குறித்த ஆய்வு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால், இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸின் குளோபல் வெல்த் அறிக்கையின்படி இந்தியாவில் 2026 ஆம் ஆண்டிற்குள் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் லட்சாதிபதிகள்
2021ஆம் ஆண்டில், இந்தியாவில் 7.96 லட்சம் லட்சாதிபதிகள் இருந்தனர். இது 2026 ஆம் ஆண்டில் 105% அதிகரித்து அதாவது 16.32 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே காலகட்டத்தில், சீனாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 97% ஆகவும், அமெரிக்காவில் 13% ஆகவும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக பணக்காரர்கள் எண்ணிக்கை
மேலும் கிரெடிட் சூயிஸின் குளோபல் வெல்த் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பீடுகளின்படி, 2026ஆம் ஆண்டில் உலகளாவிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 87 மில்லியனை தாண்டும் என்று கூறியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்ததை விட 25 மில்லியன் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடீஸ்வர்கள் பட்டியலில் முதலிடம்
உலக கோடீஸ்வரர் பட்டியலில் தற்போது அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்பதும், சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக கோடீஸ்வரர்களில் சுமார் 1% பேர் இந்தியாவில் உள்ள நிலையில், அமெரிக்காவில் 39% பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் - பிரிட்டன்
மேலும் அமெரிக்கா, சீனாவை அடுத்து ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருப்பினும், கொரியா, தைவான் உட்பட ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications