உலகமெங்கிலும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், அதற்கு காரணமே சீனா தான் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எனினும் அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பதே உண்மை.
இதற்கிடையில் கொரோனாவால் முதன் முதலாக பாதிக்கப்பட்டதில் இருந்தே, பல நாட்டு நிறுவனங்களும் தங்களது விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சீனாவினை விட்டு வெளியே வரத் துடிக்கின்றன.
அப்படி சீனா வேண்டாம் என வெளியேற துடிக்கும் நிறுவனங்களில் பல இந்தியாவினை தேர்தெடுக்கின்றன. ஏன்? என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.
இதுவும் ஒரு காரணம்
ஒரு புறம் கொரோனாவுக்கு காரணம் சீனா தான் என, சீனா மீதான அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதோடு சீனாவில் 2017-ம் ஆண்டில் இயற்றப்பட்ட தேசிய புலனாய்வு சட்டம், சீனாவை தளமாகக் கொண்ட அல்லது சீன உரிமையின் கீழ் உள்ள அனைத்து தொழில் நுட்ப நிறுவனங்களையும் நிர்வகிக்கிறது. ஆக இந்த சட்டமானது சீனா அரசாங்கம் கேட்கக்கூடிய எந்தவொரு தகவல்களையும், பகிர்ந்து கொள்ள அனைத்து வணிகங்களையும் கட்டாயப்படுத்துகின்றது.
இந்தியா கவர்ச்சிகரமான நாடு
இதற்கிடையில் சீனா வேண்டாம் என, சீனாவில் இருந்து வெளியேற நினைக்கும் இங்கிலாந்து நிறுவனங்களுக்கு, இந்தியா தான் கவர்ச்சிகரமான நாடு என்று இங்கிலாந்து இந்திய வர்த்தக கவுன்சில் தெரிவித்துள்ளது. பிடிஐ-க்கு பேட்டியளித்துள்ள இங்கிலாந்து இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயந்த் கிருஷ்ணா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து – இந்தியா வணிக வளர்ச்சியில் எதிர்பார்ப்பு
இரு நாடுகளும் கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து வெளி வருவதால், இங்கிலாந்து இந்தியா வர்த்தகத்தில் வளர்ச்சியைக் காண எதிர்பார்ப்பதாகக் கூறினார். மேலும் இங்கிலாந்து வணிகங்கள், இந்தியாவின் ஆத்ம நிர்பார் திட்டத்தில் வணிகம் செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளன என்றும் கூறியுள்ளார்.
வணிக மதிப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு வணிகம், கடந்த 2019 - 2020ம் ஆண்டில் 15.5 பில்லியன் அமெரிக்கா டாலராக இருந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 16.87 பில்லியன் டாலராக இருந்துள்ளது. சீனாவுக்கு மாற்றாக உற்பத்தி விநியோக சங்கிலி சாத்தியங்களை ஆராய, உலகளாவிய வணிக உணர்வுகளிலிருந்து வெளி வரும் வாய்ப்புகளை இங்கிலாந்து மற்றும் இந்தியா பார்க்க தொடங்கியுள்ளன என்று கிருஷ்ணா என்று கூறியுள்ளார்.
இந்தியா தான் உகந்த நாடு
இங்கிலாந்து தொழில்கள் இந்தியாவில் பல துறைகளில் நீண்ட முதலீடுகளைக் கொண்டுள்ளன. உலகளாவிய விநியோக சங்கிலிகளுக்கான மாற்று இடங்களை ஆராய விரும்பும் வணிகங்களுக்கான நாடு இந்தியா என்றும் கூறப்படுகிறது. மேலும் இங்கிலாந்து வணிகங்களின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அதிகரிக்கும் தளமாக இந்தியாவைப் பார்க்கும் என்றும் யுகேஐபிசி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
பல தேவைகள்
இந்தியாவின் தேவைகளுக்கும், இங்கிலாந்தின் சலுகைகளுக்கும் இடையில் பெரும் தேவைகள் உள்ளன. குறிப்பாக உற்பத்தி, உள்கட்டமைப்பு, எரிசக்தி, மருத்துவம், மருந்தகம் விண்வெளி மற்றும் பாதுகாப்பு போன்ற பல துறைகள் உள்ளன. 2021ம் ஆண்டில் இங்கிலாந்து உலகத்துடன் ஒரு புதிய வர்த்தக உறவை உருவாக்கியுள்ள நிலையில், இந்தியாவும் தன்மை ஒரு முக்கிய வீரராக நிலை நிறுத்தியுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!



Click it and Unblock the Notifications