கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னரே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது மிக மோசமான நிலையிலேயே இருந்தது.
Recommended Video
அதை இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் கடந்த 45 ஆண்டுகளில் இருந்ததைவிட வேலைவாய்ப்பின்மை விகிதமானது கடந்த ஆண்டு அதிகரித்தது.
அதோடு முக்கிய எட்டு முக்கியத் தொழிற்துறைகளின் உற்பத்தி வளர்ச்சியும் கடந்த ஆண்டு 5.2% குறைந்தது. இது கடந்த 14 ஆண்டுகளில் மோசமான வீழ்ச்சியாகும்.
படு வீழ்ச்சி
ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அறிமுகத்தால் தான் தொழில்துறை முடங்கியுள்ளது என நிபுணர்கள் கூறி வரும் நிலையில், கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து தான் சற்று மீண்டு வரத் தொடங்கியிருந்தன. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் என்னும் அரக்கனால் மீண்டும் பொருளாதாரம் பாதாளம் நோக்கி பாய ஆரம்பித்துள்ளது.
பொருளாதாரம் இன்னும் மோசமாகலாம்
ஆக இந்த கொடிய வைரஸின் காரணமாக, ஏற்கனவே மந்தமாக இருந்த பொருளாதார நிலையை இது இன்னும் மோசமடைய செய்யும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானவை, கொரோனாவினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக அமைதியின்மை அதிகரிக்கும்
இந்த நிலையில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜூன் ட்ரெஸ், இந்தியா மற்றும் உலகளாவிய லாக்டவுன் தொடர்ந்தால், பொருளாதாரம் இன்னும் மோசமடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார். அதிலும் இந்தியாவில் ஏற்கனவே ஊரடங்கின் காரணமாக சமூக அமைதியினை அதிகரிக்கும். ஏற்கனவே சில பகுதிகளில் இது தொடங்கி விட்டது என்றும் கூறியுள்ளார்.
நிலை நீடித்தால் பொருளாதாரம் என்னவாகுமோ?
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசின் 21 நாள் ஊரடங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படலாம் என்றும் அரசு நினைக்கிறது. ஆனால் இந்த நிலை நீடித்தால் நிலைமை இன்னும் மோசமாகக் கூடும். அப்படி இல்லையென்றாலும் கூட உலகளாவிய மந்த நிலையானது, இந்தியாவிலும் எதிரொலிக்க கூடும்.
இது மட்டும் வளர்ச்சி காணும்
கொரோனாவினால் பல துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்படி ஒரு நெருக்கடியிலும் கூட மருத்துவ பராமரிப்பு போன்ற பகுதிகள் வளரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையினால் பல துறைகள் நல்ல முறையில் வளராவிட்டாலும் செழிக்க முடியாது.
பாதிப்பு தான்
உதாரணத்திற்கு உங்களது இரு சக்கர வாகனத்தில் ஒரு டயர் பஞ்சர் ஆகினாலும், நாம் வாகனத்தினை இயக்க முடியாது. அதே போலத் தான் நம் நாட்டில் உள்ள பெரும்பாலான துறைகள் வீழ்ச்சியில் உள்ள நிலையில், ஒரு சில துறைகள் வளர்ச்சி கண்டாலும் அதையும் சேர்த்துக் எடுத்துக் கொண்டுள்ளன மற்ற துறைகள்.
மனித வளம் பற்றாக்குறை
21 நாள் ஊரடங்கு நீடிக்கப்படாவிட்டாலும், ஊழியர்கள் தமது சொந்த ஊர்களை விட்டு வெளியேறுவது தற்போதைக்கு சற்று கடினம் தான். இதனால் சில துறைகள் மனித வளம் இன்றி முடங்கலாம். இப்படியாக பலரும் பல தரப்பிலிருந்தும் கூறி வரும் நிலையில், பல தர குறியீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தினை குறைத்து வருகின்றனர்.
வளர்ச்சி கணிப்பு
பிட்ச் ரேட்டிங்ஸ், பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், 2021ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான அளவுக்கு வீழ்ச்சி கண்டு 2% ஆக குறைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. இதே ஏசியன் டெவலப்மென்ட் பேங்க் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 4% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
ஜிடிபி விகிதம்
இதே சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான எஸ் & பி குளோபல் இந்தியவின் ஜிடிபி விகிதத்தினை 3.5% ஆக குறைந்துள்ளது. இது முன்பு 5.2% ஆக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மூடிஸ் இண்வெஸ்டார்ஸ் 2020 காலண்டர் ஆண்டில் 2.5% ஆக வளர்ச்சி இருக்கும் என்றும், இது முன்பு 5.3% ஆகவும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு பாதிப்பு?
கொரோனாவின் தாக்கத்தினால் உலகப் பொருளாதாரம் எந்தளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை என்று கூறப்படும் நிலையில், இந்திய பொருளாதாரம் கூட எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்றும் தெரியவில்லை. அதிலும் இந்தியாவில் தற்போது வேகமெடுத்துள்ள கொரோனாவினால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? தெரியவில்லை.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications