டெல்லி: சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாமோலின் இறக்குமதிக்கு மத்திய அரசு, நேற்று, கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் குடியுரிமைச் சட்ட திருத்தத்தை மலேசிய பிரதமர் விமர்சித்த நிலையில், அந்த நாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில் மற்றும் வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், பாமாயில் இறக்குமதி என்பது கட்டுப்பாட்டுக்கு உள்ளே வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, ரீபைன் செய்யப்பட்ட பாமாயில்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளதாகவும், இதன்மூலம் கச்சா பாமாயில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இந்தோனேஷியாவுக்கு பலன்
இதன் மூலம், மலேசியாவுக்குதான் வணிக ரீதியாக பாதிப்பு அதிகம். ஏனெனில் ரீபைன்ட் செய்யப்பட்ட பாமாயில்களை அதிகப்படியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது மலேசியா. ஆனால் இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கை மூலம் கச்சா பாமாயில்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருக்க கூடிய இந்தோனேசியாவுக்கு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
காஷ்மீர் கருத்து
இதுபற்றி ராய்ட்டர் செய்தி நிறுவனம் மேலும் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமையை மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்தியா காஷ்மீருக்குள் ஊடுருவிவிட்டதாக, கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடியாக மோடி அரசு, ரீபைன்ட் பாமாயில் இறக்குமதி கட்டுப்பாடு விதித்துள்ளது. அரசு வட்டாரங்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன என்று, ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகாரமற்ற செய்தி
முன்னதாக, இந்தியாவிலுள்ள, பாமாயில் ரீபைன்ட் செய்யக்கூடிய நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களிடம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒரு தகவலை மத்திய அரசு பரிமாற்றம் செய்ததாக அந்த செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது. மலேசியாவிலிருந்து பாமாயில்களை வாங்கக் கூடாது என்பதுதான் அந்த செய்தி.
இந்திய தொழில்கள்
இதில் மற்றொரு விஷயத்தையும் பார்க்கவேண்டி இருக்கிறது. ரீபைன்ட் பாமாயில் இறக்குமதி இல்லை என்ற மத்திய அரசின் முடிவு காரணமாக, இந்தியாவில் பாமாயில் ரீபைன் செய்யக் கூடிய தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் கிடைக்கும். காய்கறி எண்ணெய் தயாரிப்புக்கும் ஊக்கம் கிடைக்கும்.
மலேசிய பொருளாதாரம்
மலேசிய பொருளாதாரத்தில் பாமாயில் ஏற்றுமதி என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவீதம் அளவுக்கு பாமாயில் ஏற்றுமதி பங்களிப்பு வைக்கிறது. மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய மொத்த பொருட்களில் 4.5% பாமாயில் சார்ந்த பொருட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications