தங்கம், வெள்ளி இறக்குமதி திடீரென நிறுத்தி வைப்பு: அட்சய திருதியை நெருங்கும் சூழலில் அதிர்ச்சி தகவல்

அட்சய திருதியை நெருங்கும் வேளையில் இந்திய வங்கிகள் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை திடீரென நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவ்வாறு தங்கும் வெள்ளி இறக்குமதி நிறுத்தப்பட்டு இருப்பதால் உள்நாட்டில் டிமாண்ட் அதிகரித்து, சப்ளை குறைந்து தங்கம் , வெள்ளி விலை உயர்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும்.

இந்தியாவிற்கு தேவையான தங்கம் மற்றும் வெள்ளியில் பெரும்பகுதியை நாம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். பொதுவாக இந்தியாவில் செயல்படக்கூடிய வங்கிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெள்ளியை கொள்முதல் செய்யும். ஆனால் தற்போது அவை நிறுத்தி வைத்திருக்கின்றன.

தங்கம், வெள்ளி இறக்குமதி திடீரென நிறுத்தி வைப்பு: அட்சய திருதியை நெருங்கும் சூழலில் அதிர்ச்சி தகவல்

மத்திய வர்த்தகத் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய , DGFT எனப்படும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பொது இயக்குனரகம் ஒவ்வொரு நிதி ஆண்டு தொடக்கத்தின் போதும் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடும். ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாக கூடிய இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.

அந்த வகையில் 2025 ஏப்ரலில் வெளியான அறிவிப்பு கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. அதன் பிறகு DGFT இதுவரை புதிதாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதாவது தங்கம், வெள்ளியை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் அளித்து வங்கிகள் , நிறுவனங்களின் பட்டியலை வெளியிடாமல் உள்ளது. எனவேதான் இந்தியா வங்கிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யாமல் நிறுத்தி வைத்திருக்கின்றன.

Also Read

வழக்கமாக தங்கம், வெள்ளி சப்ளை செய்யும் வெளிநாட்டு சப்ளையர்களிடம் தற்காலிகமாக புதிய ஆர்டர் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக மணி கண்ட்ரோல் செய்தி கூறுகிறது. அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட தங்கம், வெள்ளியும் டன் கணக்கில் சுங்க துறையிடமே தேங்கி கிடப்பதாக சொல்லப்படுகிறது.

DGFT-இன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான பிறகு தான் வங்கிகள் இவற்றை கொள்முதல் செய்யும். இதனால் 8 டன் வெள்ளி, 5 டன் தங்கம் சுங்கத்துறை கிளியரன்ஸ் செய்யாமல் தேங்கி கிடக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே கிளியரன்ஸ் கொடுத்து இந்த தங்கமும் வெள்ளியும் இந்தியாவில் கொண்டு வரப்படும் அதே போல புதிய ஆர்டர்களும் கொடுக்கப்படும்.

Recommended For You

தங்கம், வெள்ளி இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் இந்தியாவில் சப்ளை கட்டுப்பாடு ஏற்படும் ,ஏற்கனவே அட்சய திருதியை டிமாண்ட் அதிகரித்திருப்பதால் தங்கம் வெள்ளிக்கான சப்ளை குறையும் போது அதன் விலை இன்னும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என இந்திய நகை விற்பனையாளர் கூட்டமைப்பின் செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகிறார்.

உலக சந்தையில் ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு, உரம் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. இதனால் இந்தியா ஒவ்வொரு பொருளையும் இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்து இருக்கிறது. இத்தகைய சூழலில் வர்த்தக பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காக அரசு தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதாக என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+