பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்தியா ரஷ்யாவின் நட்பானது தொடர்ந்து மேம்பட்டு வருகின்றது. தொடர்ந்து நட்புறவினையும் தாண்டி வணிக உறவும் மேம்பட்டு வருகின்றது.
ரஷ்யாவினை முடக்க பல்வேறு நாடுகளும் திட்டமிட்டு தடைகளை விதித்து வரும் நிலையில், மறுபுறம் வழக்கத்தினை விட சுறுசுறுப்பாக ரஷ்யா இயங்க தொடங்கியுள்ளது.
இந்தியா, சீனா என பல நாடுகளுடனான வணிக உறவினை மேம்படுத்தி வருகின்றது.
வணிக வளர்ச்சி
குறிப்பாக இந்தியாவுடன் பல்வேறு வணிக நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளது, ஏற்கனவே கச்சா எண்ணெய் வணிகம், நிலக்கரி போக, சில்லறை வணிகத்தினையும் மேம்படுத்த ஏற்கனவே பல கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இதற்கிடையில் பல நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்றன.
பிரிக்ஸ் நாடுகளில் வளர்ச்சி
இதற்கிடையில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்யாவும், பிரிக்ஸ் நாடுகளின் வணிக சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகள் அதிகரித்து வருகின்றன. உதாரணத்திற்கு சீனாவில் சீன கார்கள், உபகரணங்கள், இந்தியாவுடனான சில்லறை வணிகங்கள் என பல கட்டமாக பேச்சு வார்த்தை நடந்து வருகின்றன. பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்யாவின் இருப்பும் விரிவடைந்து வருகின்றது என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் தீவிரம்
எனினும் எந்தெந்த நிறுவனங்கள் வருகின்றன என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த மாதம் ரஷ்யா இந்தியாவின் இரண்டாவது பெரிய இறக்குமதி நாடாக உள்ளது. இது சவுதி அரேபியாவினையும் விஞ்சியுள்ளது. புதினின் அறிக்கை படி பார்த்தால், இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுடன் தொடர்ந்து தனது வணிக நடவடிக்கையில் தீவிர கவனமாக இறங்கியுள்ளதை அறிய முடிகிறது.
எண்ணெய், உர ஏற்றுமதி
இந்தியாவினை தொடர்ந்து சீனாவும் அதிகளவிலான எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் தரப்பில் இருந்து எண்ணெய், நிலக்கரிக்கு அடுத்ததாக உரங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக பிரிக்ஸ் நாடுகளுக்கு உர ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றது.
ஐடி நிறுவனங்கள் விரிவாக்கம்
மேலும் இந்தியாவில் ரஷ்ய ஐடி நிறுவனங்கள் தங்களது இருப்பினை அதிகரிக்க தொடங்கியுள்ளன. தொடர்ந்து விரிவாக்கம் செய்ய தொடங்கியுள்ளன. தனது வணிக நடவடிக்கையினை மேம்படுத்த தொடங்கியுள்ளதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.
தங்கம் ஏற்றுமதி
சுவிஸ் ஃபெடரல் தரவுகளின் படி மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து 3 டன்களுக்கும் அதிகமான தங்கம் சுவிட்சர்லாந்திற்கு அனுப்பப்பட்டது. இது பிப்ரவரிக்கு பிறகு தொடங்கப்பட்ட முதல் ஏற்றுமதி என்றும் கூறப்படுகின்றது. மொத்தத்தில் ரஷ்யாவினை முடக்க நினைக்கும் நாடுகளுக்கு, ரஷ்யாவின் மறைமுக பதிலாக இது இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications