டெல்லி: உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கத்தினால் ஆட்டம் கண்டுள்ள பொருளாதாரம், முடங்கி போன தொழில்சாலைகள், நிறுவனங்கள் என பலவும் பலத்த அடி வாங்கியுள்ளன. அதன் எதிரொலியாக இதுதான் இப்படி எனில் தனி நபர் வருவாயும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இப்படி இது ஒரு புறம் பொருளாதார பெருத்த அடி வாங்கியுள்ள மக்கள், பொதுப் போக்குவரத்து தடையினால் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதிலும் இன்றைய காலகட்டத்தில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மக்களின் கொரோனாவுக்கு முன்பு போல வெளியில் செல்வார்களா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் போக்குவரத்தினை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலா துறையானது, கொரோனாவால் பெருத்த அடி வாங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திங்கட்கிழமையன்று இந்தியாவின் சுற்றுலா மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில், நடப்பு ஆண்டில் இழப்பானது 15 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் மதிப்பிடப்பட்ட 5 டிரில்லியன் டாலர் இழப்பினை விட கணிசமாக அதிகமாகும்.
கொரோனா வைரஸ் ஆனது நாடு முழுவதும் மிகவேகமாக பரவியுள்ள நிலையில், இந்தியாவில் சுற்றுலா தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்த ஐந்து மாதங்கள் வரையில் மீட்க முடியாது என்றும் இத்துறை சார்ந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி குறைந்தபட்சம் ஒன்பது மாதங்களுக்கு மொத்த தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் சுற்றுலா துறையின் நேரடி மற்றும் மறைமுக தாக்கம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10% என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய இந்த வைரஸ் பரவலால் குறைந்தபட்சம் முக்கால்வாசி சுற்றுலா பாதிக்கப்படும் என்றும் இந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த துறையுடன் சம்பந்தபட்ட விமான நிறுவனங்கள், பயண முகவர்கள், ஹோட்டல்கள், டூர் ஆப்பரேட்டர்கள் முதல் சுற்றுலா இடங்களில் உள்ள உணவகங்கள், போக்குவரத்து மற்றும் வழிகாட்டிகள் வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் இன்னும் பல மாதங்கள் கூட அப்படியே இருக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த துறையில் முறை சார்ந்த மற்றும் முறைசாரா துறையில் முழு ஆண்டிற்கான வேலை இழப்புகள் 4 கோடி வரை உயரக்கூடும் என்றும் இந்த அமைப்பு கணித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications