டெல்லி: நாட்டில் நகர்புற வேலையின்மை விகிதம் கடந்த ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில் 8.4% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டினை விட 1.3% வளர்ச்சி கண்டுள்ளது.
இதுவே ஜூன் காலாண்டில் 8.9% ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள தரவின் படி, கடந்த 2019வுடன் முடிவடைந்த காலாண்டிற்கான வேலைவாய்ப்பு குறிகாட்டிகளை வெளியிட்டது. இது கடந்த 2017 - 2018ம் ஆண்டில் தொடக்கப்பட்ட புதிய கால தொழிலாளர் படை கணக்கெடுப்பின் அடிப்படையிலான (PLFS) தரவுகள், நகர்புறங்களுக்கு மட்டுமே மதிப்பீடுகளை வழங்குகிறது.

கடந்த ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில், நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் 8.4% சரிவு கண்டுள்ளது. இந்த விகிதத்தில் 15 - 29 வயதுடையவர்காள் 20.6% ஆகவும், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர்களுக்கு 8.3% ஆகவும் இருந்துள்ளது. இதே தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (LFPR) 36.8% ஆகவும் இருந்துள்ளது. இதில் 56.6% ஆண்களும், பெண்கள் 16%மும் பங்களித்துள்ளனர். இதே கடந்த ஜூலை - செப்டம்பர் 2018ம் காலாண்டில் இந்த LFPR 36.1% ஆகவும் இருந்துள்ளது.
செப்டம்பர் 2018ல் வேலையின்மை விகிதம் 9.7% இருந்துள்ளது. நடப்பு ஆண்டின் ஜூன் காலாண்டில் இந்த வேலையின்மை விகிதம் 8.9% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. நகர்புறங்களில் 2019 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 15 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களில் 49.6% பேர் சம்பளம் வாங்குபவர்கள் அல்லது வழக்கமான கூலி தொழிலாளர்கள்.
இதில் 38.3% பேர் சுயதொழில் செய்பவர்கள், 12.1% பேர் சாதாரண தொழிலாளர்கள். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த ஜூன் 2019 காலாண்டுடன் ஒப்பிடும்போது, சுயதொழில் செய்பவர்களின் பங்கு 1.6% அதிகரித்துள்ளது. இதுவே வழக்கமான ஊதியம் மற்றும் சாதாரண தொழிலாளர்களின் பங்கு முறையே 0.8% மற்றும் 1.6% குறைந்துள்ளது.
இதே கடந்த 2018வுடன் ஒப்பிடும்போது, சுயதொழில் மற்றும் வழக்கமான கூலித் தொழிலாளர்கள் 0.3% மற்றும் 1% ஆக அதிகரித்துள்ளது. எனினும் சாதாரணமான தொழிலாளர்களின் எண்ணிக்கை 4.7% குறைந்துள்ளது.
இதில் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நகர்புற தொழிலாளர்களில் 62% பேர் மூன்றாம் நிலைத் துறையில் பணியாற்றி வருகின்றனர். இதே 32.8% பேர் இரண்டாம் நிலைத் துறையிலும், 5.2% விவசாயத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஜூன் 2019ம் காலாண்டுடன் ஒப்பிடும்போது விவசாயத்துறையில் வேலை விகிதம் 6.1% அதிகமாகவும், இரண்டாம் நிலை துறையில் பணிபுரிபவர்களின் பங்கு 1.2% குறைவாகவும் இருந்துள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications