டெல்லி: நாட்டில் நகர்புற வேலையின்மை விகிதம் கடந்த ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில் 8.4% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டினை விட 1.3% வளர்ச்சி கண்டுள்ளது.
இதுவே ஜூன் காலாண்டில் 8.9% ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள தரவின் படி, கடந்த 2019வுடன் முடிவடைந்த காலாண்டிற்கான வேலைவாய்ப்பு குறிகாட்டிகளை வெளியிட்டது. இது கடந்த 2017 - 2018ம் ஆண்டில் தொடக்கப்பட்ட புதிய கால தொழிலாளர் படை கணக்கெடுப்பின் அடிப்படையிலான (PLFS) தரவுகள், நகர்புறங்களுக்கு மட்டுமே மதிப்பீடுகளை வழங்குகிறது.

கடந்த ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில், நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் 8.4% சரிவு கண்டுள்ளது. இந்த விகிதத்தில் 15 - 29 வயதுடையவர்காள் 20.6% ஆகவும், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர்களுக்கு 8.3% ஆகவும் இருந்துள்ளது. இதே தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (LFPR) 36.8% ஆகவும் இருந்துள்ளது. இதில் 56.6% ஆண்களும், பெண்கள் 16%மும் பங்களித்துள்ளனர். இதே கடந்த ஜூலை - செப்டம்பர் 2018ம் காலாண்டில் இந்த LFPR 36.1% ஆகவும் இருந்துள்ளது.
செப்டம்பர் 2018ல் வேலையின்மை விகிதம் 9.7% இருந்துள்ளது. நடப்பு ஆண்டின் ஜூன் காலாண்டில் இந்த வேலையின்மை விகிதம் 8.9% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. நகர்புறங்களில் 2019 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 15 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களில் 49.6% பேர் சம்பளம் வாங்குபவர்கள் அல்லது வழக்கமான கூலி தொழிலாளர்கள்.
இதில் 38.3% பேர் சுயதொழில் செய்பவர்கள், 12.1% பேர் சாதாரண தொழிலாளர்கள். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த ஜூன் 2019 காலாண்டுடன் ஒப்பிடும்போது, சுயதொழில் செய்பவர்களின் பங்கு 1.6% அதிகரித்துள்ளது. இதுவே வழக்கமான ஊதியம் மற்றும் சாதாரண தொழிலாளர்களின் பங்கு முறையே 0.8% மற்றும் 1.6% குறைந்துள்ளது.
இதே கடந்த 2018வுடன் ஒப்பிடும்போது, சுயதொழில் மற்றும் வழக்கமான கூலித் தொழிலாளர்கள் 0.3% மற்றும் 1% ஆக அதிகரித்துள்ளது. எனினும் சாதாரணமான தொழிலாளர்களின் எண்ணிக்கை 4.7% குறைந்துள்ளது.
இதில் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நகர்புற தொழிலாளர்களில் 62% பேர் மூன்றாம் நிலைத் துறையில் பணியாற்றி வருகின்றனர். இதே 32.8% பேர் இரண்டாம் நிலைத் துறையிலும், 5.2% விவசாயத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஜூன் 2019ம் காலாண்டுடன் ஒப்பிடும்போது விவசாயத்துறையில் வேலை விகிதம் 6.1% அதிகமாகவும், இரண்டாம் நிலை துறையில் பணிபுரிபவர்களின் பங்கு 1.2% குறைவாகவும் இருந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications