ரூ.100-க்கு பங்கு வாங்கினால் 51% லாபம் பெறலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து சில்லறை வர்த்தகம் மற்றும் நிறுவனப் பக்கத்திலிருந்து புதிய பங்கேற்பை ஈர்த்து வருகின்றது.

 

முக்கியச் சமபங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 22 முதல் 24% என்கிற வரம்பில் இந்த ஆண்டு உலகளாவிய சக போட்டியாளர்களிடையே திறம்படச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஐபிஓ (ஆரம்பப் பொது வழங்கல்) சந்தை ஜிஐசி இன் ரூ. 11,300 கோடி மற்றும் எஸ்பிஐ லைஃபின் ரூ. 8,400 கோடி உள்ளிட்ட அபாரமான பொது வழங்கல்களைக் கண்டுள்ளது.

ஜனவரி 2017 முதற்கொண்டு கூட்டாகச் சுமார் ரூ. 50,000 பொது வழங்கல்களின் வழியே உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 100 முதல் 150 க்கு இடைப்பட்ட விலை வரம்பில் 51% வருவாயைத் தரக்கூடிய 10 பங்குகளை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம்.

என்ஆர்பி பேரிங்

என்ஆர்பி பேரிங்

என்ஆர்பி தாங்கிகளின் பங்குகள் இந்த வருடம் ஜனவரி முதல் கிட்டத்தட்ட 25% உயர்ந்துள்ளது மேலும் ஐஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் அதன் தற்போதைய விலையான ரூ. 128 முதல் இலக்கு விலையான ரூ. 160 வரை மேற்கொண்டு 25% உயர்ந்துள்ளது. என்ஆர்பி பேரிங் என்பது உருளை மற்றும் ஊசி தாங்கி தயாரிப்பில் கவனம் செலுத்தும் பேரிங் தயாரிப்பாளர்களாகும். "கார் பிரிவின் மீட்பு காரணமாக நாங்கள் என்ஆர்பி இன் மேல்வரி மற்றும் கீழ்வரி 9.8% முதல் 14.2% வரை சிஏஜிஆர் இல் நிதியாண்டு 2017 மற்றும் 19 இல் வளரும் என்று எதிர்பார்க்கிறோம். ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் கூற்றுப்படி, என்ஆர்பி மதிப்பு ஈபிஎஸ் ரூ. 7.3 லிருந்து நிதியாண்டு 2019 க்குள் 22 மடங்காகி இலக்கு விலை ரூ. 160 ஆகும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.

 பிரபாத் டைரி

பிரபாத் டைரி

பிரபாத் டைரியின் பங்குகள் நடப்பு இயல் ஆண்டில் சுமார் 40% வருவாயை அளித்துள்ளது. ஆய்வு மற்றும் தரகு நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் அதன் தற்போதைய சந்தை விலையான ரூ. 136 லிருந்து 21% உயர்த்தி இலக்கு விலையாக ரூ. 165 ஆக நிர்ணயித்துள்ளது.. ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் கூற்றின் படி, ஈபிஐடிடிஏ லாப விளிம்பு 9.4% சிஏஜிஆர் இல் 16% மும் நிதியாண்டு 2017 - 19 இல் நிறுவத்தின் வருவாய் வளரும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.

மணப்புரம் ஃபினான்ஸ்
 

மணப்புரம் ஃபினான்ஸ்

மணப்புரம் ஃபினான்ஸ் பங்குகள் 2017 இல் இதுவரை சுமார் 50% வருவாயை ஈட்டுத் தந்துள்ளது. மேலும் ஐடிபிஐ கேப்பிட்டல் நடப்பு சந்தை விலை ரூ. 101 லிருந்து இலக்கு விலை ரூ. 142 வரை 40% அதிகமான உயர்வை தந்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு இல்லமான ஐடிபிஐ கேப்பிட்டல் கூற்றுப்படி, மணப்புரம் பினான்ஸ் நிறுவனம் தங்கக் கடன்கள் தொடர்பாக ரூ. 10,700 கோடிக்குப் பட்டியலிடப்பட்டுள்ள பகுதியில் இரண்டாவது மிக அதிகமான ஏயுஎம் (நிர்வாகத்தின் கீழுள்ள சொத்துக்கள்) கொண்டுள்ள என்பிஎஃப்சி (வங்கி அல்லாத நிதி கூட்டுக் குழுமம்) ஆகும்.

மிண்டா கார்ப்

மிண்டா கார்ப்

மிண்டா கார்ப்பின் பங்குகள் ஜனவரி 2017 இன் தொடக்கத்திலிருந்தே சுமார் 60% உயர்ந்துள்ளது. ஆய்வு மற்றும் தரகு நிறுவனமான எஸ்கார்ட்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் மேற்கொண்டு அதன் நடப்பு சந்தை விலையான ரூ. 138 லிருந்து இலக்கு விலையாக ரூ. 210 வரை 51% உயர்த்தியுள்ளது. பங்குகள் நிதியாண்டு 2018 இல் ஈபிஎஸ் ரூ. 6.55 க்கு 21.2 மடங்கும் மற்றும் நிதியாண்டு 2019 க்கு ஈபிஎஸ் ரூ. 10.46 க்கு 13.3 மடங்குக்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் நிறுவனத்தைப் பழமையான அடிப்படையில் 20 மடங்கிற்கு மதிப்பிடுகிறோம். எஸ்கார்ட்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் கூற்றின் படி, நியாயமான மதிப்பீடு ரூ. 210 க்கு வருகிறது.

கிரானுவல்ஸ் இந்தியா

கிரானுவல்ஸ் இந்தியா

கிரானுலஸ் இந்தியாவின் பங்குகள் ஒன்பதரை மாதங்களில் 25% க்கு மேல் 2017 ஆம் ஆண்டின் வருவாய் பங்களிப்பாக இதுவரை கிடைத்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான ஜே.எம். பைனான்சியல் நிறுவனம், 26 சதவீதத்தை உயர்த்தியதன் மூலம் ரூ. 169 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. "கடந்த இரு ஆண்டுகளில் கிரானுலஸ் இந்தியா நிறுவனம் அதன் உற்பத்தி திறன்களை விரிவுபடுத்தவும் அதன் அடுத்தடுத்த வளர்ச்சியை ஆதரிக்கவும் பெரும் மூலதன செலவுகளைச் செய்துள்ளது. இந்தக் கூடுதல் வருவாய் மெய்ப்படுத்தல்கள் மூலதனத்தைத் திரும்பப் பெறும் (ROCE) வசதிகள் 2019 நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் அதன் வியாபாரப் பிரிவுகளில் வலுவான பணப்பாய்ச்சல்கள், மேம்படுத்தப்பட்ட லாப விளிம்புகள் மற்றும் நிலையான வர்த்தக வளர்ச்சி ஆகியவற்றை எதிர்பார்க்கிறோம்." இதுவே ஜே.எம். நிதியகத்தின் கூற்றாகும்.

எஸ்ஆர்ஈஐ உள்கட்டமைப்பு நிதி

எஸ்ஆர்ஈஐ உள்கட்டமைப்பு நிதி

எஸ்ஆர்ஈஐ உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் பங்குகள் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 50% க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான ஜேஎம் ஃபினான்சியல், 25% அளவிற்கு மேல் தந்து ரூ 142 என்ற இலக்கு விலையை அடைகிறது. "நிர்வாகமானது அதன் வியாபாரத்தில் அபாயங்களைக் குறைப்பதற்காக, உடல்நல உபகரணங்கள், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் போன்ற ஆபத்து குறைவான புதிய பகுதிகளுக்குக் கடன் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. சமூகக் கிராமப்புற உள்கட்டமைப்பு (சஹஜ்), தொழிற்துறை பூங்காக்கள் (பிந்தைய கோபுரம் விற்பனை மற்றும் பாரத் ரோடு நெட்வொர்க்) ஆகியவற்றில் திறனை வளர்ப்பதன் மூலம் நமது பார்வையில் முக்கிய முன்னேற்றத்தை வழங்குகிறது" என்று ஜேஎம் நிதி நிறுவனம் கருத்துத் தெரிவிக்கிறது.

என்ஐஐடி லிமிடெட்

என்ஐஐடி லிமிடெட்

என்ஐஐடி லிமிடெட் பங்குகள் நடப்பு 2017 இயல் ஆண்டில் கிட்டத்தட்ட 30% வருவாய் ஈட்டியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான இந்தியா புல்ஸ் வெண்ட்சர்ஸ் ரூ. 105 என்ற அதன் தற்போதைய சந்தை விலையில் இருந்து 43% உயர்த்தி ரூபாய் 150 க்கு மேல் விலை நிர்ணயம் செய்துள்ளது. என்ஐஐடி லிமிடெட் ஒரு தனி மனிதத்திறன்கள் மற்றும் திறமை மேம்பாட்டு நிறுவனமாகும். "பங்கானது 2.11 மடங்காக நிதியாண்டு 2019 இல் P/BVக்கு நியாயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. பங்குதாரர்களுக்கு ரூபாய் 150 என்ற இலக்கை அடைவதற்கு ரூ. 49.83 என்ற P/BV இன் 3 மடங்கு பெருக்கற்பலனாக நிதியாண்டு 2019 இல் ஒதுக்க விரும்புகிறோம்," என இந்தியா புல்ஸ் வென்ட்சர்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகள் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரே சமநிலையில் இருந்து தற்போது கிட்டத்தட்ட 5% உயர்ந்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான குளோப் கேப்பிட்டல் மார்க்கெட், அதன் தற்போதைய சந்தை விலை ரூ.124 லிருந்து 27% உயர்த்தி இலக்கு விலையான ரூ. 277 க்கு அதிகரித்துள்ளது. பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.எஃப்.சி) என்பது ஆர்பிஐ யுடன் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு முன்னணி மின் துறை பொது நிதி நிறுவனம் மற்றும் ஒரு வங்கிசாரா நிதி நிறுவனமாகும்.

செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 2017 ஆம் ஆண்டில் 80% க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான குளோப் கேப்பிட்டல் மார்க்கெட், அதன் தற்போதைய சந்தையின் விலை ரூ. 117 லிருந்து 25% உயர்த்தி ரூ. 147 ஐ இலக்காக விலையாக நிர்ணயித்து உள்ளது. குளோப் கேப்பிட்டல் மார்க்கெட் கூற்றின் படி, "நிறுவன மேலாண்மையானது நிறுவனத்தின் கடன் புத்தகத்தின் வளர்ச்சி வருடந்தோறும் 20 முதல் 25 சதவிகித ஆண்டு வளர்ச்சியுடன் 5 சதவிகிதம் பெருநிறுவன வளர்ச்சியைக் கொண்டு தொடர்ந்து லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கிறது".

கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கியின் பங்குகள் இதுவரை 2017 ஆம் ஆண்டில் 50% க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளன. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான ஏஞ்சல் புரோக்கிங் இலக்கு விலையாக ரூ180 ஐ சந்தை விலை ரூ 143 லிலிருந்து 26% உயர்த்தி நிர்ணயித்துள்ளது. "கேவிபி ஆனது நிதியாண்டு 2011 முதல் 2017 வரை 14.9 சதவிகிதத்திற்கும் அதிகமான வலிமையான கடன் CAGR ஆக இருந்தது. எனினும், நிதியாண்டு 2017 ஒரு ஒருங்கிணைப்பு ஆண்டாக இருந்து கடன் புத்தகம் 4.7% மட்டுமே வளர்ந்தது. கடன் வளர்ச்சியானது நிதியாண்டு 2017 முதல் 2019 வரை 11% வரை உயரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏஞ்சர் புரோக்கிங்கின் கூற்றுப்படி வைப்புத்தொகை வளர்ச்சி 9 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது".

குறித்த உரிமைத்துறப்பு

குறித்த உரிமைத்துறப்பு

கிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Buy these 10 stocks between Rs 100 to 150 and gain up to 51 percent in 2074

Buy these 10 stocks between Rs 100 to 150 and gain up to 51 percent in 2074
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X