என்ன தான் முதலீட்டு திட்டம் இருந்தாலும் அஞ்சலகத்தில் உள்ள திட்டங்கள் இன்றும் மிக பிரபலமான திட்டங்களாக உள்ளன. குறிப்பாக பெண் குழந்தைகள் எனும்போது, இன்னும் ஒரு படி மேலே போல் சேமிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சேமிப்பாக இருக்க வேண்டும். உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்பாக இருக்கும்.
அதற்கான வட்டி விகிதமும் அதிகம், இது மிக பாதுகாப்பான ஒரு திட்டம் எனலாம். அப்படி ஒரு வாய்ப்பினை வழங்கும் ஒரு திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமாகும்.
பெண் குழந்தை பெயரில் தொடக்கம்
ஒரு பெண் குழந்தை பிறந்த உடன் தொடங்கிக் கொள்ளலாம். இதனை 10 வயதில் அடையும் வரை அவர்களின் பெயரில் தொடங்கிக் கொள்ளலாம். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில் தொடங்கிக் கொள்ளலாம். இதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழும் அவசியம் தேவை.
எவ்வளவு வட்டி?
ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கினை மட்டுமே தொடங்கிக் கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே தொடங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு வருடத்திற்கு வட்டி விகிதம் 7.6% ஆகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு 250 ரூபாயில் இருந்து, 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம்.
வரிச்சலுகை
இதில் நீங்கள் மாத மாதமோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ டெபாசிட் செய்து கொள்ளலாம். இதில் இடையில் நிறுத்தப்பட்ட கணக்குகளை கூட தொடங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் அதிகபட்சம் தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகள் வரையில் தொடர்ந்து கொள்ளலாம். இதில் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை கிடைக்கும்.
முதிர்வு மற்றும் முடிவு
இந்த திட்டமானது பெண் குழந்தையின் வயது 21 வயதை எட்டும் போது முதிர்வடையும். 18 வயதிற்கு மேல் பெண்ணிற்கு திருமணம் நடக்கும்போது தானாகவே முதிர்வடையும்.
ஒரு வேலை திட்டத்தின் காலத்தில் பாதுகாவலர் இறந்து விட்டாலோ அல்லது தீவிர நோயால் பாதிக்கப்பட்டாலோ? அந்த சமயத்தில் இடையில் முடித்துக் கொள்ளலாம்.
எப்படி தொடங்குவது?
இந்த திட்டத்தினை உங்களது அருகில் உள்ள அஞ்சலகத்தில் சென்று தொடங்கிக் கொள்ளலாம். இல்லையெனில் அஞ்சலகத்தின் இணைய பக்கத்தில் உள்ள பார்மினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதனை அருகில் இருக்கும் அஞ்சலகத்தில் கொடுக்கலாம்.
ஏன் சிறந்தது?
இந்தியா முழுவதும் 1.5 லட்சம் அஞ்சலக கிளைகளை கொண்டிருக்கும் நிலையில், இதில் எளிதில் சேவைகளை பெற முடியும். அதோடு இந்த திட்டங்களின் மூலம் கணிசமான முதிர்வு தொகையினையும் பெற முடியும். இதன் மூலம் உங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்று திருமணத்திற்கு தேவையான நிதியினை பெற முடியும். இது ஒரு காலகட்டத்தில் நாம் இல்லையென்றாலும் கூட, அவர்களின் எதிர்காலம் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருக்கும்.
More From GoodReturns

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications