
இத்தகைய கணக்குகளை நீங்கள் மூட வேண்டும் அல்லது அதன் நிலையை மாற்ற வேண்டும். நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் எனில், உள்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் போன்று இன்ட்ரா டே டிரேடிங்கில் ஈடுபட முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியரான பிறகு உள்நாட்டில் இருந்தபோது வைத்திருந்த கணக்கை பயன்படுத்துவது சட்டப்படி குற்றாமாகும்.
வேறு நடைமுறைகள்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் கண்டிப்பாக, ஒரு போர்ட்போலியோ முதலீடு திட்டத்தின் (பிஐஎன்எஸ்) மூலம் தங்களுடைய அனைத்து வகையான வாங்குதல்/ விற்பனை பரிமாற்றங்கள் போன்றவற்றில் ஈடுபடலாம். இது மத்திய ரிசர்வ் வங்கியின் சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுடைய பிஐஎன்எஸ்' கணக்கை தங்களுக்கு வசதியான வங்கி கிளைகளில் தொடங்க வேண்டும். அந்த வங்கி கிளை, பிஐஎன்எஸ் கணக்கின் மூலம் செய்யப்பட்ட அனைத்து முதலீடுகளையும் பதிவு செய்து பராமரித்து வரும். என்வே, ஒரு வெளிநாடுவாழ் இந்தியர் டீமேட் கணக்கு, வர்த்தக கணக்கு, மற்றும் பிஐஎன்எஸ் கணக்கை தொடங்கி பங்குகளை வாங்கி விற்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
இன்ட்ரா டே டிரேடிங் அனுமதி
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இன்ட்ரா டே வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி இல்லை. அதாவது, நீங்கள் இந்தியாவில் வசிப்பவர் போன்று போன்று ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்க முடியாது. நீங்கள் பங்குகளை வாங்கிய நாளிலிருந்து நான்காவது நாள் மட்டுமே அவற்றை விற்க முடியும்.
நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் என்பது எப்படி தெரியும்?
இந்தியாவின் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (எப்இஎம்ஏ) படி, ஒரு இந்திய குடிமகன், அல்லது இந்தியாவை பூர்விகமாக கொண்ட வெளிநாட்டவர் வெளிநாடுகளில், வேலை நிமித்தமாகவோ, வியாபார நோக்கமாகவோ, விடுமுறைக்காகவோ நீண்ட காலம் தங்க முற்படும் பொழுது, வெளிநாடு வாழ் இந்தியர் என்கிற தகுதியை பெறுகிறார். ஒரு தனி நபர் முந்தைய நிதி ஆண்டில், இந்தியாவில் 182 நாட்களுக்கும் குறைவாக தங்கி இருந்தார் எனில் அவரை ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக கருத முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications