சென்னை: இந்தியாவில் பங்கு சந்தையில் பணம் மற்றும் தொகுது முதலீட்டில் அதிகளவில் ஈடுபடும் மக்கள், பண வர்த்தக சந்தை என அழைக்கப்படும் Currency Trading Market-இல் ஈடுபடுவதில்லை. இதற்கான காரணம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கான முக்கிய காரணமாக நிதி நிறுவனங்கள் தெரிவிக்கிறது.
இந்தியாவின் பங்குச் சந்தையைப் போன்ற வளர்ச்சியைப் பெற இந்த சந்தை இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், கரன்சி சந்தைகளில் வர்த்தகம் செய்வதன் மூலமாக, உங்களுக்கு பங்குச் சந்தைகளிலும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
எப்படி வேலை செய்கிறது?
பங்குச் சந்தைகளுக்கு கணக்கைத் துவக்குவது போலவே, பண வர்த்தக கணக்கு ஒன்றை புரோக்கர் மூலமாக நீங்கள் முதலில் துவங்க வேண்டும். பெரும்பாலான புரோக்கர்கள் தேசிய பங்குச் சந்தை அல்லது மும்பை பங்குச்சந்தையில் உறுப்பினர்களாக இருப்பார்கள் மற்றும் பண வர்த்தக கணக்குகளை துவக்கித் தரவும் செய்வார்கள்.
நாணய வர்த்தகம்
உங்களுக்கான பண வர்த்தக கணக்கு தொடங்கப்பட்டவுடன். நீங்கள் வர்த்தகம் செய்யத் துவங்கலாம். இந்த வர்த்தகத்தில் அமெரிக்க டாலர், பிரிட்டனின் பவுண்ட், யூரோ அல்லது ஜப்பானிய யென் ஆகியவற்றை நீங்கள் வாங்கவும், விற்கவும் செய்யலாம்.
12 மாத ஒப்பந்தம்
பங்குச் சந்தையில் உள்ள பங்குப் பிரிவுகளில் பங்குகளுக்கான ஒப்பந்தங்கள் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகின்றன. பண வர்த்தகத்திற்கான ஒப்பந்தங்கள் 12 மாதங்களுக்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் ஒரு பெரும் தொகையுள்ள டாலர் ஒப்பந்தத்தை வாங்கினால், அதனை 12 மாதங்களுக்குப் பிறகு தீர்க்கலாம். எனவே, ஏப்ரல் 2014-ல் டாலர் ஒப்பந்தத்தை வாங்கியிருந்தால், அதனை மார்ச் 2015-ல் தீர்க்க முடியும்.
1 = 1000 யூனிட்
ஒவ்வொரு ஒப்பந்தத்திற்குமான குறைந்த பட்ச லாட் அளவு 1. ஒரு 'லாட்' அளவில் மொத்தம் 1000 யூனிட்கள் இருக்கும்.
3000 ரூபாய் இருந்தாவ் போதும்
நீங்கள் ஒரு லாட் உள்ள 1000 யூனிட்களை வாங்க ரூ.3000/- தேவை. எனவே, உங்களிடம் ரூ.3000/- இருந்தால், உங்களால் 1000 யூனிட்களை வாங்க முடியும்.
லாபம்
ஏப்ரல் 23-ல் ரூ.60/- என்ற மதிப்பில் 1000 யூனிட்களை நீங்கள் வாங்கினால், ஏப்ரல் 28-ல் ரூ.60.10/- என்ற மதிப்பில் வர்த்தகத்தை முடித்து, ரூ.100/-ஐ இலாபமாகப் பெற முடியும். அதேபோல, நீங்கள் 10000 யூனிட்களை வாங்கி, ரூ.60.10/- என்ற அளவில் விற்கும் போது, உங்களால் ரூ.100/-ஐ இலாபமாகப் பெற முடியும்.
நஷ்டம்
அதேபோல, 1000 யூனிட்களை ரூ.60/- என்ற மதிப்பில் வாங்கி, ரூ.59.90/- என்ற மதிப்பில் விற்கும் போது, ரூ.100/-ஐ நட்டமாக அடைவீர்கள்.
சந்தை நாட்கள்
திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் பண வர்த்தக சந்தைகள் நடைபெறுகின்றன.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications