இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் இன்று மதியம் சுமார் இரண்டரை மணிக்கு 36 ஆயிரத்து 425 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாக இருக்கிறது. இது தான் இன்றைய நாளுக்கான குறைந்த பட்ச புள்ளியாக இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் இன்று மட்டும், 698 புள்ளிகள் இறக்கத்தை தொட்டு வர்த்தகமாகி வருகிறது சென்செக்ஸ்.
இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் இருந்தே சென்செக்ஸ், இறக்கத்திலேயே வர்த்தமாகி வந்ததை முந்தைய செய்தியில் சொல்லி இருந்தோம். அப்போது, ஒருவேளை சென்செக்ஸ் மேலும் இறக்கம் காண தொடங்கினால், 36 ஆயிரத்து 400 பள்ளிகளில் சப்போர்ட் இடத்தில் நிற்கும் என்பதையும் சொல்லி இருந்தோம்.

இன்று வர்த்தகம் ஆகின்ற போக்கை பார்த்தால், இன்று வர்த்தக்க நேரத்திற்குள் 36 ஆயிரத்து 400 என்கிற வலுவான சப்போர்ட் புள்ளியை உடைத்துக் கொண்டு கீழே போகாமல் இருந்தாலே மிகப்பெரிய விஷயம் போல் இருக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மோடி தலைமையிலான அரசு இந்திய பொருளாதாரத்தையும் பங்குச் சந்தையையும் தூக்கி நிறுத்த பல்வேறு அறிவிப்புகளை சொல்லி இருந்த போதிலும், சவுதி அரேபியாவின் எண்ணெய் சப்ளை குறைந்ததால் பிரச்சனைகள் வேறொரு பரிமாணத்தை எடுத்திருக்கின்றன.
ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 20 சதவிகிதம் வரை உயர்ந்து இருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் எழுபத்திரண்டு ரூபாயை நோக்கி வர்த்தகமாகிக் கொண்டிருப்பது போன்றவைகள் இந்திய சந்தையை நேரடியாக பாதித்துக் கொண்டிருக்கின்றன.
ஆட்டோமொபைல், வங்கி, ரியல் எஸ்டேட், நிதி நிறுவனங்கள் போன்ற துறை சார் பங்குகள் சற்றே அதிக இறக்கத்தில் வர்த்தகமாகி சென்செக்ஸின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. கிட்டத்தட்ட பி எஸ் இயில் இருக்கும் அனைத்து துறைசார் இன்டெக்ஸ்களும் இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. எனவே இதற்கு மேல் சந்தையில் வர்த்தகம் மேற்கொள்பவர்கள் மிக மிக ஜாக்கிரதையாக தங்கள் ஆர்டர்களைப் போடுவது அல்லது விற்பது நல்லது என்கிறார்கள் அனலிஸ்டுகள்.
இந்திய சந்தைக்கு எப்போது தான் நேரம் சரியாகுமோ தெரியவில்லை. இது நாள் வரை இந்திய அரசே சென்செக்ஸை கண்டு கொள்ளாமல் இருந்தது. இப்போது சென்செக்ஸை அவர்கள் உயர்த்த நினைக்கும் போது, உலக காரணிகள் அவர்களை பந்தாடிக் கொண்டு இருக்கிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications