கடந்த செவ்வாய்கிழமையன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலம் 1.14 லட்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் கடனுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த 100 சதவீத கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 1.14 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், ஏற்கனவே இதில் 56,091 கோடி ரூபாய் நிதியானது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

ஆத்மா நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகள் 65,863.63 கோடி ரூபாய் நிதியினை, 32,00,430 கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அனுமதித்துள்ளன. இதில் 35,575.48 கோடி ரூபாய் நிதியினை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இதே தனியார் வங்கிகள் 4,28,014 வங்கி கணக்குகள் மூலம் 48,638.96 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 20,515.7 கோடி ரூபாய் கடன் மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் எஸ்பிஐ, ஹெஸ்டிஎஃப்சி வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் அதிகளவில் கடன் வழங்கியுள்ளன.
ஆக அரசின் இந்த அதிரடியான திட்டமானது கொரோனாவின் மத்தியில் மிக அழுத்தத்தில் இருக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது உதவும் என்றும், குறிப்பாக 19 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது உதவும் என்றும் கூறப்படுகிறது.
அரசின் இந்த திட்டமானது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் கொரோனாவின் மத்தியில் பல பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கு மத்தியில், இது புத்துயிர் கொடுக்கும் விதமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு 3 லட்சம் கோடி ரூபாய் கடனை வழங்கும் திட்டத்தினை அறிவித்திருந்தது நினைவு கூறக்தக்கது.
இது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு எம்எஸ்எம்இ-க்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வழி வகுக்கும் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications