Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
டெல்லி: மத்திய அரசுக்கு சொந்தமான எரிபொருள் நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யின் காலாண்டு நிகர லாபம் 48 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் காலாண்டு நிதி நிலை குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2012-2013 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பெற்றுள்ள நிகர லாபம் ரூ. 6,077.70 கோடி. கடந்த நிதி ஆண்டில் ஏப்ரல்-ஜூன் கால அளவில் நிறுவனம் பெற்ற நிகர லாபம் ரூ. 4,094.90 கோடியாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு அளவில் ஓ.என்.ஜி.சி.யின் லாப வளர்ச்சி 48 விழுக்காடாகும். இந்தக் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. 21 ஆயிரத்து 216.24 கோடியாக உள்ளது. சென்ற நிதி ஆண்டில் இதே கால அளவில் ஓ.என்.ஜி.சி. பெற்ற மொத்த வருவாய் ரூ. 17 ஆயிரத்து 128.89 கோடி என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
ONGC Q1 net jumps 48%; to ink pact with Mitsui this month | ஓ.என்.ஜி.சி.யின் காலாண்டு லாபம் 48 விழுக்காடு
Story first published: Sunday, August 12, 2012, 10:38 [IST]