
(Gold rates in India on June 19 )
சமீபத்தில் ஏர்டெல் 199,870,006 புதிய பங்குகளை வெளியிட்டிருக்கிறது. ஒரு பங்கின் விலை ரூ.340 என்று நிர்ணயித்திருந்தது. இதை அறிந்த கத்தார் ஃபவுண்டேசன் என்டோவ்மென்ட் (QFE) நிறுவனம் ஏர்டெல்லின் 5% பங்குகளை வாங்கி இருக்கிறது.
"வெளிநாட்டைச் சேர்ந்த கியுஎஃப்இ நிறுவனம், இந்திய நிறுவனமான ஏர்டெல்லின் பங்குகளை அதிக அளவில் வாங்கியிருப்பது, பங்குப் பரிவர்த்தனையின் ஒரு புதிய மைல்கல் ஆகும். இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்ய முன்வருவார்கள். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்ய இந்த பரிவர்த்தனை ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுக்கும். அதோடு கியுஎஃப்இ நிறுவனத்தோடு ஒரு இனிமையான உறவைத் தொடர நாங்கள் விரும்புகிறோம்" என்று ஏர்டெல்லின் சேர்மன் சுனில் பாரதி மிட்டல் தெரிவித்திருக்கிறார்.
புதிய பங்குகளின் பரிவர்த்தனையின் மூலம் ஏர்டெல்லின் மூலதனம் ரூ.19,987,000,510 அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பங்குக்கு ரூ.5 வீதம் 3,997,400,102 பங்குகள் விற்பனையாகி இருக்கின்றன.
மேற்கண்ட் புதிய பங்குகள் வெளியீடு சம்பந்தமாக, கடந்த மே மாதம் 3 அன்று, ஏர்டெல் மற்றும் கியுஎஃப்இ நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய ஒப்பந்தத்தை வெளியி்ட்டன. 5% பங்குகளை வாங்கியதன் மூலமாக, ஏர்டெல்லின் ஆட்சி மன்ற குழுவில் கியுஎஃப்இ நிறுவனத்திற்கு ஒரு உறுப்பினர் பதவி கிடைத்திருக்கிறது.
இதைப் பற்றி கியுஎஃப்இ நிறுவனத்தின் தலைமை மேலாளர் கூறும் போது, "நாங்கள் செய்திருக்கும் முதலீட்டிற்கு, பாரதி ஏர்டெல் நிறுவனம் அளிக்கும் ஆதரவை நினைத்து நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஏர்டெல்லின் ஒரு முதலீட்டாளர் என்ற முறையில், ஏர்டெல் நீண்ட காலம் நிலையான வளர்ச்சியைப் பெற எங்கள் ஆதரவை வழங்குவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications