சென்னை: சேமிப்புக் கிடங்குகளில் இருப்பதாக தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NSEL) கூறிய பொருட்களின் அளவு குறித்து சந்தேகம் இருப்பதால், சுமார் 13,000 முதலீட்டாளர்களின் பண்டக சந்தை மூலதனம் கேள்விக்குறியாகியுள்ளது.
தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் நிறுவனத்தை சார்ந்த தரகு நிறுவனங்களின் தரகர்கள், சேமிப்புக் கிடங்குகளுக்கு சென்று பொருட்களின் அளவுகளை சோதனை இட்டதாக கூறப்படுகிறது. NSEL கூறியது போல் கிடங்குகளின் பொருட்களின் கையிருப்பு நிலை சரிவர இல்லை என நம்பப்படுகிறது.
கிடங்குகளில் உள்ள பொருட்களைப் பற்றி பதிவேடுகளில் தவறான கணக்குகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், 13,000 முதலீட்டாளர்களின் பண்டக சந்தை மூலதனம் ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
NSEL நிறுவனர் ஜிக்னேஷ் ஷா, எவ்வாறு NSEL முதலீட்டாளர்களுக்கு ரூ 5,500 கோடியை திருப்பிச் செலுத்த போகிறது என்று விரைவில் அறிவிப்பார் என நம்பப்படுகிறது.
பண்டகச் சந்தையின் ஒழுங்கு முறை ஆணையமான பண்டகச் சந்தைகள் ஆணையம், திங்களன்று நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த பிரச்சினையப் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னோக்கு ஒப்பந்தங்களை வர்த்தகச் சந்தையில் பரிமாற்றம் செய்யக் கூடாது என்ற விதியை மீறி NSEL அதிகாரிகள் முன்னோக்கு ஒப்பந்தங்களை வழங்கியபோது இந்த பிரச்சினைகள் தொடங்கின. பின்னர் விதிமீறல் குற்றத்திற்காக தடைசெய்யப்பட்ட பின்னர் தனது செயல்பாடுகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
பைனான்சியல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஒரு அமைப்பான தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NSEL) பல் பொருள் பண்டப் பரிமாற்று வர்த்தகத்தை இயக்கும் தளமாகும். இந்த நிறுவனத்தின் கீழ் ஒன்பது பரிமாற்றகங்களும் நான்கு சுற்றுச்சூழல் திட்டங்களும் உள்ளன.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications