சென்னை: 2013ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பிரச்சனைகள் பணவீக்கம், நிதி நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி, அதிகப்படியான தங்க இறக்குமதி, இன்னும் பல.
இந்த சூழ்நிலையிலும் சில நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டது. இதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக ஐடி, பார்மா, எஃப்எம்ஜிசி துறை பங்குகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. 2013ஆம் ஆண்டில் பங்கு சந்தையில் கலக்கிய 5 நிறுவனங்களை இங்கு பார்ப்போம்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு மிகவும் நன்றாக அமைந்தது. இதன்படி இந்நிறுவன பங்குகள் சுமார் 103 சதவிதம் உயர்ந்தது. ரூபாய் மதிப்பு குறைவாலும், பொருளாதார மீட்சியாலும் இந்நிறுவன பங்குகள் இத்தகைய உயர்வை அடைந்தது.
டிசிஎஸ் நிறுவனம்
டாடா குமுமத்தின் ஒரு பகுதியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் வருடத்தின் துவக்கத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லை என்றாலும், ரூபாய் மதிப்பின் குறைவின் காரணமாக இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 71 சதவீதம் வளர்ந்துள்ளது.
விப்ரோ
இந்திய ஐடி துறையின், மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணி நிறுவனமாக திகழும் விப்ரோ நிறுவனம் 2013ஆம் வருடம் 57 சதவீத உயர்வை அடைந்தது.
சன் பார்மா நிறுவனம்
மருந்து உற்பத்தி மற்றும் மருந்து ஏற்றுமதியில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக திகழும் சன் பார்மா நிறுவனம் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் அதிகப்படியான லாபத்தை இந்நிறுவனம் அடைந்தது. இதனால் இந்நிறுவன பங்குகள் 52 வார உயர்வை எட்டியது.
இன்போசிஸ்
நாராயண மூர்த்தி வருகைக்கு பின்னர் இந்நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலுமாக மாறியது. 2ஆம் காலாண்டில் வல்லுனர்களின் கணிப்பிற்கும் அதிகமான லாபங்களை அடைந்தது. அத்துடன் இந்நிறுவன பங்குகள் 50 சதவீத வளர்ச்சியை அடைந்தது.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications