மும்பை: ஹெச்சிஎல் குழுமத்தின் அங்கமாக திகழும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வாங்க ஒரு சிறந்த முதலீட்டாளரை அந்நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் தேடுவதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தது. இச்செய்தி ஐடி துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பீதியை கிளப்பியது.
இது குறித்து ஹெச்சிஎல் குழுமத்தின் நிர்வாகிகளை அனுகியபோது, "ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை பற்றி வெளியேறும் செய்திகளை ஹெச்சிஎல் கார்போரேஷன் முற்றிலுமாக மறுக்கிறது" என அந்நிறுவன செய்திக்குறிப்புத் தெரிவிக்கிறது.
62% பங்குகள்
நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் ஏறக்குறைய 62 சதவிகித பங்குகளை இந்தியாவின் நான்காவது பெரும் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் கூட்டு நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் வைத்துள்ளார்.
வங்கி உதவி
அவர் இந்த பங்கு விற்பனைக்காக வங்கிகளை இன்னும் நாடவில்லை எனவும் இருவர் இதைப்பற்றிய விவரமளித்துள்ளதாகவும் அந்த செய்தி அறிக்கைக் கூறியது.
16.6 பில்லியன் டாலர்
தேசிய பங்குச்சந்தையில் 16.6 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்குகள் 12.4 சதவிகிதம் உயர்ந்து 1,543.30 என்ற விலையில் பங்குகள் விற்கப்படுகிறது.
பங்கு சந்தை நிலவரம்
கடந்த ஒரு வருட காலத்தில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் பங்கு பன்மடங்கு உயர்ந்துள்ளது, மேலும் இந்நிறுவனத்தின் லாப விகிதமும் தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications