மும்பை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் அனைத்து முதலிட்டாளர்கள் மற்றும் நிதியியல் வல்லுனர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை இன்று காலை ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வெளியிட்டார்.
இந்த பணவியல் கொள்கையில் வட்டி விகிதங்கள் பெருவாரியாக குறையும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர், ஆனால் நிலை மாறியது. பொருளாதாரம் கடந்த 6 மாதங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டு இருந்தாலும், பணவீக்கத்தையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வர ரகுராம் ராஜன் வட்டி வகிதங்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை.

ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகைக்கு அளிக்கப்படும் வட்டி விகிதமான ரொப்போ வட்டி வகிதத்தில் எந்த விதமான மாற்றமும் செய்யவில்லை தற்போது இருக்கும் 8 சதவீதமாகவே நீடிக்கும் என ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
மேலும், வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும்.


Click it and Unblock the Notifications