பெங்களுரூ: இந்தியாவின் சாப்ட்வோர் துறையில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த சில மாதங்களாக பல உயர் அதிகாரிகள் வெளியேறி நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்நிலையில் மற்றும் ஒரு உயர் அதிகாரி நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்.
இந்நிறுவனத்தின் தலைமை இணக்க அதிகாரியான (chief compliance officer) நித்தியானந்தன் ராதகிருஷ்ணன் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார். இவர் இந்நிறுவனத்தின் வெளிநாட்டு வர்த்தகத்தின் சட்டதிட்டங்களில் அதிகம் பங்கு கொண்டவர், மேலும் இவர் இந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் மிகவும் முக்கிய பொறுப்புகளில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
புதிய ஆள்
இதுகுறித்து இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் நித்தியானந்தன் ராதகிருஷ்ணன் பதவியில் இவர் முளையாக செயல்பட்ட பரவதீசம் கஞ்சிநாதம் இப்பதவியில் செயல்படுவார் என செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் பரவதீசம் கஞ்சிநாதம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் செயல்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
பரவதீசம் கஞ்சிநாதம்
கஞ்சிநாதம் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இடம்பெற உள்ளார். இந்த குழு நிறுவனத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஒரு உயர்வான குழுவாகும். தற்போது இக்குழு ஒழுங்குமுறை இணக்கத்தை கவணித்து கொண்டுவருகிறது.
முக்கிய தொடர்பு
இன்போசிஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் உயர் நிர்வாக குழுவிற்கு இடையில் செயல்படும் முக்கிய அதிகாரியாக செயல்படுவார். இப்படம் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக குழு.
இன்போசிஸ்
இந்நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல உயர் அதிகாரிகள் வெளியேறி வருகின்றனர் இதற்கு காரணம் நிர்வாகமா?? அல்லது நிறுவனத்தின் நிலையற்ற செயல்பாடா??. நிறுவனத்தின் செயல்பாடு சரிவு பாதையை நோக்கி செல்வதால் இந்த அதிகாரிகள் நிறுவனத்தின் எதிர்காலத்தை கணித்து வெளியேறுகின்றனரா என்பது புலன்படாத ஒரு விஷயமாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications