ஹாங்காங்: வெள்ளிக்கிழமையன்று உலகளவில் கச்சா எண்ணெய்-யின் விலை கடந்த 9 மாதங்களிலேயே மிகவும் அதிகமான அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஈராக் போர்வீரர்களும், இஸ்லாமிய போராளிகளும் அந்நாட்டின் மிகப்பெரிய எண்ணைய் வயலை கட்டுப்படுத்துவதற்காக போரிட்டுக் கொள்வதைத் தொடர்ந்து இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
போராளிகளின் படைகளை எப்படியாவது பைய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு பகுதியில் முடக்கி விடும் நோக்கத்துடன் கடுமையாக முயற்சித்து வருகிறது.
ஈராக்
ஈராக்கிய அரசாங்கம் வியாழக்கிழமையன்று இந்த இரண்டு பிரிவுகளும், எண்ணைய் வயலின் இருவேறு பகுதிகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தன. சில பல கிலோ மீட்டர்களுக்கு பரந்து விரிந்திருக்கும் இந்த எண்ணெய் கிணறு, தலைநகரம் பாக்தாத்தில் இருந்து சுமார் 255 கிமீ (155 மைல்கள்) தொலைவில் உள்ளது.
3 இலட்சம் பேரல்கள்
பிளாட்ஸ்-ன் கருத்துப்படி பாக்தாத் எண்ணெய் கிணற்றிலிருந்து ஒரு நாளுக்கு 320,000 பேரல்கள் எண்ணெய் எடுக்க முடியும். இது ஈராக்கின் எண்ணைய் சுத்திகரிப்பு திறனில் கால் பங்கு அளவிற்கு சமமானதாகும்.
இறக்குமதி
இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணைய் அனைத்தும் உள்நாட்டு பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில், நெடுநாட்களுக்கு இந்த எண்ணைய் வயலை மூடி வைத்திருப்பதால், அந்நாட்டை எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளி விடும்.
விலை உயர்வு
ஆகஸ்ட் மாதத்தில் டெலிவரி செய்ய வேண்டிய கச்சா எண்ணெயின் விலை நியூயார்க் மெர்கண்டைல் எக்ஸ்சேஞ்சில் ஒரு பேரலுக்கு 2 சென்ட்கள் உயர்ந்து 106.07 டாலர்களாக உயர்ந்துள்ளது.
9 மாத உயர்வு
சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலையை நிர்ணயம் செய்ய பயன்படுத்தப்படும், பிரென்ட் குரூட் ஆயில், இலண்டனில் பேரலுக்கு 12 சென்ட்கள் குறைந்து 114.94 டாலர்களாக உள்ளது. இது கடந்த 9 மாதங்களிலேயே அதிகமான விலையாக உயர்ந்தது.


Click it and Unblock the Notifications