சென்னை: இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமல்ல, உலகின் பெரும்பான்மையான நாடுகளின் பண மதிப்புகளும் அமெரிக்க டாலரைக் கொண்டே கணக்கிடப்படுகின்றன.
சர்வதேசச் சந்தைகளில் அன்னியச் செலாவணியின் ஏற்ற இறக்கங்களைப் பொருத்து, ஒவ்வொரு வினாடியும் இந்திய ரூபாயின் மதிப்பும் அமெரிக்க டாலரின் மதிப்பும் மாறிக் கொண்டே இருக்கும்.
குறிப்பாக, தங்கம் மற்றும் பெட்ரோல் விலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் போது, இரு நாடுகளின் பண மதிப்பும் எகிறும் அல்லது அடியாகும். எல்லாம் சரி எதை கொண்டு ஒரு நாட்டின் பணத்தை அமெரிக்க டாலருக்கு எதிராக கணக்கிடப்படுகிறது. இந்த கேள்வி பலருக்கு தோன்றியிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. உதரணத்திற்கு நம் இந்தியா ரூபாயை எடுத்துக் கொள்வோம்
தமிழ் குட்ரிட்டன்ஸ் பேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்!!
நடப்பு கணக்கு பற்றாக்குறை
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் போதெல்லாம், ரூபாயின் மதிப்புக்கு அடியாகும். அப்படித்தான் கடந்த 2013 ஆகஸ்ட்டில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 68.86 என்ற அளவுக்கு அதல பாதாளத்தில் வீழ்ந்தது.
அமெரிக்காவில் முதலீடு
உலகின் பெரும் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை அமெரிக்க சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்யும்போது, டாலரின் மதிப்பு கிடுகிடுவென உயரும். டாலரின் மதிப்பு உயர்ந்தாலே போதும், இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென்று குறைந்து விடும்.
அரசியல் குழப்பங்கள்
உலகில் எந்த நாட்டில் அரசியல் குழப்பங்கள் நடந்தாலும், அது உலக அளவில் திடீர் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி விடும், இதில் குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அதிகளவில் பாதிக்கும். இதனால் அமெரிக்க டாலரில் ஏற்படும் பாஸிட்டிவ்- நெகட்டிவ்களைப் பொருத்து, ரூபாயின் மதிப்பு மாறுபடும்.
கச்சா எண்ணெய் விலை
உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம், டாலருக்கு எதிரான ரூபாயின் விலை அடியாகும்.
ஏற்றுமதி-இறக்குமதி
நாம் வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும்போது, அவர்களுக்கு அமெரிக்க டாலரில்தான் நாம் பணத்தைச் செலுத்த வேண்டும். அதனால், இறக்குமதிகள் அதிகரிக்கும் போதெல்லாம் டாலரின் மதிப்பு அதிகரிக்கும்; தானாகவே, ரூபாயின் மதிப்பு குறைந்து விடும். நம் நாடு செய்யும் ஏற்றுமதிகளை விட இறக்குமதிகள் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கரண்ட் அக்கவுண்ட் பண வீக்கமும் அதிகரிக்கும்.
ரிசர்வ் வங்கியின் குறுக்கீடு
சில சமயம், அன்னியச் செலாவணிச் சந்தைகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, அமெரிக்க டாலர்களை ரிசர்வ் வங்கி வாங்கும். அப்படி வாங்கும் போதெல்லாம், ரூபாயின் மதிப்பு குறைந்து விடுகிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் பேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்!!
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications