சிங்கப்பூர்: உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஒரு மாத வர்த்தகத்தில் மட்டும் சுமார் 5 வருட சரிவை தழுவியுள்ளது. உலக நாடுகளின் எண்ணெய் தேவையின் அளவை விட அதிகமான அளவிற்கு சுவுதி அரேபியா நிறுனங்கள் எண்ணெயின் உற்பத்தி செய்தது. இதனால் எண்ணெயின் விலை கடுமையாக பாதித்தது.
இன்றைய அதிகாலை கமாடிட்டி வர்த்தக முடிவில் WTI கச்சா எண்ணெயின் விலை 0.93 சதவீதம் சரிந்து 53.11 என்ற விலையிலும், brent கச்சா எண்ணெயின் விலையில் 1.00சதவீதம் சரிந்து 57.30 என்ற விலையில் விற்கப்படுகிறது.
மேலும் நடப்பு நிதியாண்டிலும், 2015ஆம் ஆண்டின் உலக நாடுகளின் மொத்த வளர்ச்சி ஏறுமுகமாக உள்ளது இதன் மூலம் எண்ணெய் மற்றும் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என சிட்னி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி 2014ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாகவும், 2015ஆம் ஆண்டில் 3.6 சதவீதமாக இருக்கும் என உலக நாடுகளின் அமைப்பு கணித்துள்ளது. அதனைக் கொண்டு எண்ணெய் தேவையின் அளவையும் கணித்துள்ளது இவ்வமைப்பு.
2014ஆம் ஆண்டில் எண்ணெய் தேவைகளின் அளவு 1.05 mb/dஆகவும், 2015ஆம் நிதியாண்டில் இதன் தேவை 1.19mb/dஆகவும் இருக்கும். எனவே கச்சா எண்ணெயின் விலை தற்போது தொடர்ந்து சரிந்து வந்தாலும், அடுத்த 6 மாத காலத்தில் மீண்டும் உயரும் என சிட்னி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.