மும்பை: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ், பங்கு சந்தையில் இறங்க தயாரானது. இதன் மூலம் இந்நிறுவனம் 500 மில்லியன் டாலர் ஆதாவது 3,162 கோடி ரூபாய் நிதியை திரட்ட உள்ளது.
மேலும் இந்நிறுவனம் 2015ஆம் நிதியாண்டின் துவக்கத்தில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. இதனால் சில்லறை முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய புதியதாக ஒரு நிறுவனம் கிடைத்துள்ளது.
மைக்ரோமேக்ஸ்
2008ஆம் ஆண்டில் குறைந்த விலையில் பெரிய திரைகளை கொண்ட மொபைல்களை விற்பதன் மூலம், சந்தையில் மிகப்பெரிய இடத்தை இந்நிறுவனம் பிடித்தது. முதலில் இந்நிறுவனத்தின் குறைந்த அளவான பங்குகளை மட்டும் சந்தையில் விற்க மைக்ரோமேக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
14 மடங்கு உயர்வு
இந்நிறுவனம் பங்குகளை விற்பதற்காக பன்னாட்டு வங்கிகளான மோர்கன் ஸ்டான்லி மற்றும் கோல்டுமேன் சேச்சஸ் ஆகிய நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்குமதிப்பீடு 14 மடங்கு அதிகாமாக இருக்கும் என நம்புகிறது.
முதல் முயற்சி தோல்வி
2010ஆம் ஆண்டு இந்நிறுவனம் டிஏ அசோசியேட்ஸ் மற்றும் சிகோயா கேப்பிடல் துணையுடன், சில வங்கி உதவிகளுடன் சந்தையில் இறங்க தயாரானது, ஆனால் சந்தையில் மோசமான நிலையில் காரணமாக சந்தையில் இறங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கியது மைக்ரோமேர்ஸ்.
போட்டி
இந்நியா மற்றும் சில உலக நாடுகளில் சாம்சங், மோட்டோரோலா மற்றும் ஜியோமி ஆகிய நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கிறது.
வளர்ச்சி
நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவில் மொபைல் விற்பனை 64 சதவீதம் உயர்ந்தது, இதில் 25 சதவீதம் சாம்சங் கைபற்றியது, இதை தொடர்ந்து 20 சதவீதத்தை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கைபற்றியது.
More From GoodReturns

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

பாகிஸ்தான்-க்கு மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி.. பாவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஓரே நாளில் 6.5 லட்சம் கோடி இழப்பு.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications