டெல்லி: அஞ்சலக வங்கி (Post Bank of India) திறக்கப்பட்ட பின்னரே இத்துறையின் அரசுப் பங்கில் ஒரு சிறு பகுதியைப் பொதுமக்கள் வர்த்தகத்திற்காக பங்குச்சந்தையில் வெளியிட இந்தியா போஸ்ட் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
100 வருட வர்த்தகம்
இந்தியாவில் மிகப் பழமையான பணிபரிமாற்றம் மற்றும் லாகிஸ்டிக்ஸ் நிறுவனம் என்றால் அது இந்திய தபால் துறை தான். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பணப் பரிவர்த்தனைகளை இந்திய தபால் துறை கையாண்டு வருகிறது.
இந்திய தபால் துறை
மேலும் இந்தியாவில் அரசு நிறுவனங்களில் அதிக கிளைகளை கொண்டுள்ள நிறுவனங்களில் இந்திய தபால் துறை முதன்மையானது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் அஞ்சல் துறை பரவலாகச் செயல்பட்டு வருகிறது.
பாதி வங்கி
எனவே அந்தக் கட்டமைப்பைக் கொண்டு "இந்தியா போஸ்ட் வங்கி' தொடங்க உரிமம் பெறத் திட்டமிடப்பட்டது. வங்கி தொடங்கும் உரிமத்துக்கான விண்ணப்பத்தை அரசின் சிறப்புப் பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. தற்போது தபால் துறை, பாதி வங்கியாக செயல்பட அதாவது வங்கி சேவைகலில் சிலவற்றை மட்டும் தபால் துறை அளிக்கு உள்ளது, இதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
பங்குச்சந்தை
முறையான உரிமம் வழங்கப்பட்டு, முழுமையான வங்கியாகச் செயல்படத் தொடங்கியவுடன், அரசுப் பங்கில் ஒரு பகுதியைப் பொதுப் பங்காக வெளியிடலாம் என்று அஞ்சல் துறை அதிகாரிகள் கூறினர்.
இலட்சம் கிளை
நாட்டில் அஞ்சல் துறையின் கீழ்உள்ள சுமார் 1.55 லட்சம் கிளைகளில், ஊரகப் பகுதிகளில் மட்டுமே 1.4 லட்சம் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
வங்கிகளின் நிலை
அதே சமயத்தில், அனைத்து வங்கிகளின் ஊரகப் பகுதிக் கிளைகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 35 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications