சென்னை: சர்வதேச நாணய சந்தையில் அமெரிக்காவின் ஜாப்ஸ் டேட்டாவின் எதிரோலியாக டாலர் மதிப்பு வெள்ளிக்கிழமை உயர்ந்தது. ஆனால் திங்கட்கிழமை காலையில் நாணய சந்தையில் கிரீஸ் நாட்டின் நிதிநெருக்கடி, சீனாவின் வர்த்தக சந்தை அறிக்கையில் எதிரொலியாக ஆசிய சந்தையில் மந்த நிலை நிலவியது. இதனால் டாலர் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் அஸ்திரோலிய டாலர் மதிப்பு தொடர் சரிவு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணசுருக்க நிலை உலக பொருளாதாரத்தை அதிகளவில் பாதித்துள்ளது.
இதன் முலம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தக துவக்கத்தில் 62.085 ரூபாய் அளவில் குறைந்தாலும் அசிய சந்தையின் மந்த நிலை காரணமாக அடுத்த சில மணிநேரங்களில் டாலர் மதிப்பு 62.045 ரூபாயாக உயர்ந்தது.
இந்நிலையில் டாலர் மதிப்பு ஒரு வாரத்திற்கு பின்பு மீண்டும் 62 ரூபாயை எட்டியுள்ளது.
மேலும் கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மே 22ஆம் தேதி 58.29 ரூபாய் அளவில் உயர்ந்தது. அதேபோல் டிசம்பர் 16ஆம் தேதி 63.94 ரூபாய் அளவில் சரிந்தது குறிப்பிடதக்கது.