மும்பை: சர்வதேச முதலீட்டு வங்கிகள் வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தையைக் குறிவைத்து தனது வர்த்தகத்தை மேம்படுத்த உள்ளன. அதிலும் முக்கியமாகத் துவக்க (ஸ்டாட் அப்) நிறுவனங்களை மையமாக வைத்து தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள துவக்க நிறுவனங்களின் செயல்பாடு பன்னாட்டு நிறுவனங்களை அதிகளவில் கவர்ந்துள்ளதால், இந்நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். இதன் படி பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவ முதலீட்டு வங்கிகள் இந்திய சந்தையில் இறங்கியுள்ளது.
முக்கிய வங்கிகள்
தற்போது இந்திய சந்தையில் வர்த்தக விரிவாக்கத்திற்காகக் கோல்டுமேன் சாச்சஸ் குரூப், சிட்டி குரூப் மற்றும் மார்கன் ஸ்டான்லி ஆகிய முதலீட்டு வங்கிகள் குதித்துள்ளது.
இவ்வங்கிகள் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசனை நிபுணராகச் செயல்படுகிறது.
புதிய அதிகாரிகள்
இதன் படி, இந்த மூதலீட்டு வங்கிகள் இந்தியாவில் பல புதிய பணியாளர்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
மேலும் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் அனைவரும் உயர் பதவிகளில் நியமிக்கப்படுவதாகவும் இவ்வங்கிகள் தெரிவித்துள்ளது.
ஈகாமர்ஸ்
தற்போதைய நிலையில் இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் அதிகளவிலான பணம் முதலீடு செய்யப்படுகிறது.
இதில் உலக நாடுகளின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களான ஜப்பான் சாப்ட்பாங்க், சிங்கப்பூர் டீமாசெக் ஹோல்டிங்கிஸ் மற்றும் ஜிஐசி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் அடக்கம்.
பிற துறைகள் நிராகரிப்பு
முதலீட்டு வங்கிகள் அதிகளவிலான வளர்ச்சிப் பெரும் துறைகளையும் விட்டுவிட்டுத் தற்போது இந்திய சந்தையின் துவக்க நிறுவனங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறது.
வேலைவாய்ப்பு
இத்தகைய நிலையில் இந்தியாவில் துவக்க நிறுவனங்களின் வளர்ச்சி ஒரு புறம் அதிகரித்தாலும், வேலைவாய்ப்பு உயர்வு எண்ணிக்கை உயர்வு குறைவாகவே உள்ளது.
மேலும் பெரு நிறுவனங்கள், சிறு அல்லது துவக்க நிறுவனங்களைக் கையகப்படுத்தும் போது பணியாளர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்கின்றனர்.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications