டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனத்தின் கூர்கான் மற்றும் மெனேசர் தொழிற்சாலை ஊழியர்களுக்கான 3 வருட ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் படி மாருதி சுசூகி நிறுவனத்தின் கூர்கான் மற்றும் மெனேசர் தொழிற்சாலை ஊழியர்கள் அடுத்த 3 வருடத்தில் 16,800 ரூபாய் வரை ஊதிய உயர்வு அளிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை கடந்த 6 மாதமாகப் பல கட்டங்களாக நடைபெற்று வருவதாக ஊழியர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் மாருதி சுசூகி நிறுவனம் கூறுகையில், அடுத்த 3 வருடத்தில் நிறுவன ஊழியர்கள் சராசரியாக 38 சதவீதம் வரை ஊதிய உயர்வு பெறுவார்கள் எனக் கூறியுள்ளது.
இன்று கையெழுத்தான ஒப்பந்ததன் படி 16,800 ரூபாய் ஊதிய உயர்வில் முதல் வருடம் 8,430 ரூபாயும், அடுத்த இரு வருடங்களுக்கு 4,200 ரூபாயும் அளிக்கப்பட உள்ளது.