சென்னை: தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாகச் சிறப்பாக இயங்கி வரும் காளி ஏரேட்டெட் வாட்டர் வொர்க்ஸ் நிறுவனத்தின் குளிர்பான பிராண்டுகள் தான் காளிமார்க் மற்றும் போவன்டோ.
இந்த நிறுவனம் அடுத்த 6 வருடத்தில் அதாவது 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,000 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை எட்ட மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது.
2020ஆம் ஆண்டு
இந்த 6 ஆண்டுகளுக்குள் காளிமார்க் நிறுவனம் புதிய தொழிற்சாலைகளை அமைக்கவும், புதிய முதலீட்டாளர்களைக் கவரவும், மேலும் வர்த்தக விரிவாக்கத்திற்காகப் பல புதிய குளிர்பானங்களைச் சர்வதேச தரத்திற்கு இணையாகக் காளிமார்க் நிறுவனம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய தொழிற்சாலை
தற்போது ஆந்திர மாநில ஸ்ரீசிட்டி-க்கு அருகில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலையை அமைக்கப்பட்ட உற்பத்தியைத் துவங்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது காளிமார்க் நிர்வாகம்.
தமிழ்நாடு
அடுத்த 6 ஆண்டுகளில் தென் தமிழக நிறுவனமாகத் திகழும் இந்தக் காளிமார்க் நிறுவனம் தமிழ்நாட்டு நிறுவனமாக உருமாற வேண்டும் என்பதே எங்களது முக்கியக் குறிக்கோள் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.பி.ஆர்.தனுஷ்கோடி தெரிவித்துள்ளார்.
தற்போது இந்நிறுவனம் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் வருவாயைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
100 ஆண்டுகள்
1916-ம் ஆண்டு விருதுநகரில் உள்ள விருதுபட்டி கிராமத்தில் தொடங்கப்பட்ட இந்தக் காளிமார்க் நிறுவனம் தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் காளிமாரக் நிறுவனம் இக்குடும்பத்தின் நான்காம் தலைமுறையினர் இந்நிறுவனத் தயாரிப்புகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக நடத்தி வருகின்றனர்.
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விப்ரோ (VIBRO) என்ற பெயரிலான பன்னீர் சோடாவை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வென்டிங் மெஷின்
மேலும் கல்லூரி வளாகங்கள் மற்றும் விற்பனை வளாகங்களில் தானியங்கி இயந்திரங்களை நிறுவும் திட்டமும் உள்ளதாகத் தனுஷ்கோடி தெரிவித்தார்.
ஸ்நாக்ஸ்
2018-ம் ஆண்டில் லேஸ், குர்கூரே போன்ற உடனடி ஸ்நாக்ஸ் தயாரிப்பில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாக்க இந்நிறுவனம் தலைவர்கள் தெரிவித்தார்கள்.
ஏற்றுமதி
அடுத்தச் சில வருடங்களில் தென் இந்தியா மட்டும் அல்லாது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காகக் கேன்களில் குளிர்பானங்களைத் தயாரிக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications