டெல்லி: கடந்த ஆண்டை விட இந்தாண்டு தகவல் தொழில் நுட்ப துறை வல்லுநர்கள் சம்பாதிக்கும் வருமானம் இருமடங்காக அதிகரித்துள்ளது. அதே போல் இயந்திர கற்றல் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் பிரிவுகளில் தேவை அதிகரித்துள்ளது.
நாஸ்காம் (மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய சங்கம்) ஆய்வறிக்கை படி, கடந்த ஆண்டு, ஐ.டி துறையில் சராசரி சம்பள உயர்வு 6-8% ஆக இருந்தது. இந்த ஆண்டு 8-10% ஆக சம்பள உயர்வு அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் சங்கீதா குப்தா கூறியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சி முன்பை விட இரு மடங்கு அதிகரித்துள்ளத. ஐடி துறையில் தொழில்சார் சேவை நிறுவனங்கள் சுமார் 10 சதவிகிதம் பெருகியுள்ளது. சமீபத்திய மதிப்பீட்டின் படி, ஐ.டி. துறைக்கான சராசரி உயர்வு 9.8% ஆக இருப்பதாக கூறினார்.
2017-18 ல், பெரும்பாலான நிறுவனங்கள் ஏராளமானோரை பணியமர்த்தி உள்ளது. அந்த வகையில், இன்போசிஸ், இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 55,000 பேரை பணி அமர்த்தியுள்ளது, "டிசம்பர் 2018 வரை, 2,54,100 ஊழியர்களுடன் ஒப்பிடும் போது, பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,25,500 ஆக உள்ளது.
மெர்சர் பரிந்துரையின் படி, ஐடி நிறுவனங்களுக்கு எதிர்கால வைப்பு நிதியாக 10 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு 8 சதவிகிதம் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் 6.5 சதவீதத்தில் இருந்து மெல்ல, மெல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த தொழிற்துறையில் தேடல்கள் வேறு விதமாக உள்ளது. அதே நேரம், வெகுமதிகளுக்கும் குறைவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications