டெல்லி : இந்தியாவில் 17வது லோக்சபா தேர்தல் இன்றோடு முடிவடைவதையடுத்து, இனி வரும் நாட்களில் வெளிவந்து கொண்டிருக்கும் கருத்துக் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டே இந்தியப் பங்குச் சந்தைகள் வர்த்தகமாகும் என்று கருதப்படுகிறது.
அதுவும் இரண்டு மூன்று செசன்களிலும் இந்திய பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் முடிவடைந்தது. இனி வரும் நாட்களிலும் இந்த ஏற்றம் தொடருமா? வரப்போகும் புதிய ஆட்சியை யார் பிடிப்பார்கள்? வரப்போகும் புதிய அரசு எந்த மாதிரியான நிதிக் கொள்கை மாற்றி அமைக்கும் என்பதை பொறுத்தே இருக்கும் என்றாலும் அதற்கு முன்னதாக பங்கு சந்தையில் பெரிய மாற்றம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

எனினும் வந்து கொண்டிருக்கும் கருத்துக் கணிப்புகளை கொண்டு எதையும் தீர்மானிக்க முடியாது. ஏனெனில் இதற்கு முன்னர் வெளிவந்த இரண்டு மூன்று தேர்தல் முடிவு பற்றிய கணிப்புகள் கடைசி நேரத்தில் மாற்றியமைத்து ஆட்சியே மாறியது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஆக வரப்போகும் நாட்களில் சந்தை கருத்துக் கணிப்புகளை நம்ப முடியாது. கண்டிப்பாக சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம். இங்கு காளை ஜெயிக்குமா? கரடி ஜெயிக்குமா? தெரியாது. ஆனால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் போது கவனத்தோடு செய்ய வேண்டும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் பங்கு சந்தை காளையாய் சீறிப் பாயலாம். எனினும் புதிய ஆட்சிக்கு பின்னர் அப்படியே இருக்குமா என்பது தான் சந்தேகம். ஏனெனில் வரப்போகும்புதிய அரசுக்கு பல பல கடிமான பலப் பரிட்சைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக வரப்போகும் ஆட்சி எடுக்கும் புதிய நிதிக் கொள்கையாலேயே அன்னிய முதலீடுகள் வருவதும், இல்லை இருப்பதும் வெளியே போகுமா என்பதே தெரிய வரும். இப்போது ஆட்டம் காட்டி வரும் இந்த சந்தை போக்குகள் வெறும் பேருக்குதான். தேர்தல் முடிந்த பின்னரே உண்மையான ஆட்டம் என்னவென்பது தெரிய வரும்.
எனினும் கடந்த வாரம் வெளியிடப்பட்ட சில கருத்துக்கணிப்புகள் தேர்தலுக்கு முன்பும் பின்பும் இந்திய பங்கு சந்தைகள் சாதகமாகவே வர்த்தகமாகின என்றும் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த வாரம் பங்கு சந்தையில் நீண்ட கால போக்குகளை உருவாக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். மேலும் அதிக லாபம் படைப்பிற்கான வாரமாகவும் இருக்கும். தேர்தல் முடிவுகள் போன்ற அரசியல் நிகழ்வுகள் பொதுவாக ஆண்டுகளாக நீடிக்கும் போக்குகளை உருவாக்குகின்றன. அதோடு பொருளாதாரம் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இது முக்கியமானதே எபிக் (Epic Research) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முஸ்தபா நதீம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
More From GoodReturns

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டது எப்படி? வெளிச்சத்துக்கு வந்த அமெரிக்க- இஸ்ரேல் கூட்டு சதி!!



Click it and Unblock the Notifications