கொரோனா தொற்றுக்கு பின்பு இந்திய பணக்காரர்கள், பிஸ்னஸ் குடும்பங்கள் எனப் பணம் பலம் கொண்ட பல தரப்பினர் இந்திய குடியுரிமையை விடுத்து வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர்.
ஒருபக்கம் சிறந்த கல்வி, மேம்படுத்தப்பட்ட மருத்துவச் சேவை, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை, 0 வருமான வரி, எளிதான வர்த்தகத் தொடர்புகள் எனப் பல காரணம் கூறப்பட்டாலும். இந்திய சந்தையில் உருவான பணம் வெளிநாடுகளுக்குச் செல்கிறது வருத்தமான செய்தி.
இந்நிலையில் இந்த வருடம் எத்தனை பேர் இந்தியாவை விட்டு வெளியேறப்போகிறார்கள் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
இந்திய பணக்காரர்கள்
இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள் எண்ணிக்கையில் பெரிய ஏற்றம் இருக்கும் என்று ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சவால்
ஆனால், இந்த மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களை இந்தியாவில் தக்க வைப்பது பெரும் சவாலாக இருக்கும் என இந்தியாவை விட்டு வெளியேறி வருவதைச் சுட்டிக்காட்டி ஹென்லி & பார்ட்னர்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
8,000 பேர்
ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் டாஷ்போர்டின் தரவுகள் படி இந்த ஆண்டு இந்திய பணக்காரர்களில் சுமார் 8,000 பேர் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என ஹென்லி & பார்ட்னர்ஸ் கணித்துள்ளது. இந்தப் போன்ற வெளியேற்றம் ஆசியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல முக்கிய நாடுகளில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ரஷ்யா, சீனா
இந்தியாவில் 8000 பணக்காரர்கள் வெளியேற உள்ள நிலையில் ரஷ்யாவில் அதிகபட்சமாக 15,000 பேர் வெளியேறுவார்கள் என்றும், சீனா-வின் இதன் எண்ணிக்கை 10,000 ஆக இருக்கும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. பணக்காரர்கள் வெளியேற்றத்தின் அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
புதிய பணக்காரர்கள்
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை விட்டு வெளியேறும் பணக்காரர்களைக் காட்டிலும் புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் பெரிய அளவில் கவலைப்படத் தேவையில்லை என்று நியூ வேர்ல்ட் வெல்த்தின் ஆராய்ச்சித் தலைவர் ஆண்ட்ரூ அமோயில்ஸ் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

இந்தியாவின் புதிய பணக்கார சாதனை: ஒரே வருடத்தில் 57 புதிய பில்லியனர்கள்!ஆசியாவின் டாப் யார்?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications