கொரோனா தொற்றுக்கு பின்பு இந்திய பணக்காரர்கள், பிஸ்னஸ் குடும்பங்கள் எனப் பணம் பலம் கொண்ட பல தரப்பினர் இந்திய குடியுரிமையை விடுத்து வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர்.
ஒருபக்கம் சிறந்த கல்வி, மேம்படுத்தப்பட்ட மருத்துவச் சேவை, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை, 0 வருமான வரி, எளிதான வர்த்தகத் தொடர்புகள் எனப் பல காரணம் கூறப்பட்டாலும். இந்திய சந்தையில் உருவான பணம் வெளிநாடுகளுக்குச் செல்கிறது வருத்தமான செய்தி.
இந்நிலையில் இந்த வருடம் எத்தனை பேர் இந்தியாவை விட்டு வெளியேறப்போகிறார்கள் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
இந்திய பணக்காரர்கள்
இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள் எண்ணிக்கையில் பெரிய ஏற்றம் இருக்கும் என்று ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சவால்
ஆனால், இந்த மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களை இந்தியாவில் தக்க வைப்பது பெரும் சவாலாக இருக்கும் என இந்தியாவை விட்டு வெளியேறி வருவதைச் சுட்டிக்காட்டி ஹென்லி & பார்ட்னர்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
8,000 பேர்
ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் டாஷ்போர்டின் தரவுகள் படி இந்த ஆண்டு இந்திய பணக்காரர்களில் சுமார் 8,000 பேர் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என ஹென்லி & பார்ட்னர்ஸ் கணித்துள்ளது. இந்தப் போன்ற வெளியேற்றம் ஆசியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல முக்கிய நாடுகளில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ரஷ்யா, சீனா
இந்தியாவில் 8000 பணக்காரர்கள் வெளியேற உள்ள நிலையில் ரஷ்யாவில் அதிகபட்சமாக 15,000 பேர் வெளியேறுவார்கள் என்றும், சீனா-வின் இதன் எண்ணிக்கை 10,000 ஆக இருக்கும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. பணக்காரர்கள் வெளியேற்றத்தின் அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
புதிய பணக்காரர்கள்
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை விட்டு வெளியேறும் பணக்காரர்களைக் காட்டிலும் புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் பெரிய அளவில் கவலைப்படத் தேவையில்லை என்று நியூ வேர்ல்ட் வெல்த்தின் ஆராய்ச்சித் தலைவர் ஆண்ட்ரூ அமோயில்ஸ் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications