இந்தியாவின் பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தி நிர்வகிக்கும் அமைப்பு தான் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா (SEBI - Securities and Exchange Board of India). தற்போது அஜய் தியாகி என்பவர் தான் இந்த செபி அமைப்பின் தலைவராக பதவியில் இருந்து வருகிறார்.

செபி அமைப்பின் தலைவராக யு கே சின்ஹாவுக்குப் பிறகு, கடந்த 01 மார்ச் 2017 முதல் அஜய் தியாகி பதவி வகித்து செபி அமைப்பை வழி நடத்தி வருகிறார்.
அஜய் தியாகிக்கு கடந்த பிப்ரவரி 2020-லேயே பணிக் காலம் முடிந்துவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் போன்ற பல்வேறு காரணங்களால் அஜய் தியாகிக்கு 6 மாத காலம் (31 ஆகஸ்ட் 2020 வரை) பணி நீட்டிப்பு வழங்கி இருந்தது மத்திய அரசு.
அஜய் தியாகிக்கு, தற்போது மேலும் 18 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்து இருக்கிறது மத்திய அரசு. பணி நியமன கேபினெட் கமிட்டி (Appointments Committee of the Cabinet), அஜய் தியாகியின் இந்த நீட்டிப்புக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்களாம். எனவே, அஜய் தியாகி 01 செப்டம்பர் 2020 முதல் 28 பிப்ரவரி 2022 வரை செபி அமைப்பின் தலைவராகவே தொடருவாராம்.
அஜய் தியாகி 1984-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (ஐ ஏ எஸ்). ஹிமாச்சலப் பிரதேச கேடரைச் சேர்ந்தவர். முது கலை பொருளாதாரம், முது கலை பொது நிர்வாகம், முது கலை கணிணி அறிவியல் படித்தவர்.
2005 முதல் 2008 வரையான கால கட்டத்தில் கூட மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் சில பதவிகளில் பணியாற்றி இருக்கிறார்.
அதன் பின், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் வனம் & சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பதவியில் இருந்து இருக்கிறார். 2014-ம் ஆண்டு முதல் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் பொருளாதார விவகாரத் துறையில் (Department of Economic Affairs) பணியாற்றி இருக்கிறார். அதன் பின் தான் இந்திய பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்பின் தலைவராக பதவிக்கு வந்து இருக்கிறார் அஜய் தியாகி.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications