உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் அமெரிக்காவில் கிடங்கு நிர்வாகம் மற்றும் டெலிவரி பிரிவில் சுமார் 1 லட்சம் பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பைக் கொடுப்பதாக அறிவித்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது இந்தியாவை மட்டுமல்ல அமெரிக்காவையும் தாக்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள மக்கள் தங்களது தினசரி தேவைகளை அதிகளவில் வாங்கிக் குவித்து வருகின்றனர், அதிலும் குறிப்பாக ஆன்லைனில்.
இதனால் அமேசான் தளத்தில் ஆர்டர்களின் எண்ணிக்கை எப்போதும் அல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது, இதனை ஆர்டர்களைச் சமாளிக்க அமேசான் சுமார் 1 லட்சம் பேரை புதிதாகப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிலும் இதேபோன்ற நிலை தான் அடுத்த சில வாரங்களில் ஏற்படும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
வல்லரசு அமெரிக்கா
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள காரணத்தால் மார்ச் மாத இறுதி வரையில் அனைத்து அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகள் வீட்டில் இருந்தபடியே இயங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தினசரி தேவைகளைப் பூர்த்திச் செய்ய மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் அதிக எண்ணிக்கையிலும் அளவுகளிலும் வாங்கத் துவங்கியுள்ளனர்.
இதனால் பல கடைகளைப் பொருட்கள் இல்லாமல் காலியாக உள்ளது.
ஆன்லைன்
கடைகளில் பொருட்கள் இல்லாத நிலையில் மக்கள் வேறு வழி இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த துவங்கியுள்ளனர். இதனால் அமேசான், வால்மார்ட், போன்ற இணையத் தளங்களில் ஆர்டர்கள் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
இந்தத் திடீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் நேரடியாக உற்பத்தி நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கியுள்ளது.
டெலிவரி
இது எல்லாமே சரி, ஆனால் வரலாறு காணாத ஆர்டர்கள் குவிந்துள்ள நிலையில் இதை எப்படி மக்களுக்கு டெலிவரி செய்வது. இந்தப் பிரச்சனையைக் களையும் வண்ணம் அமெரிக்காவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் கிடங்கு அதாவது சரக்குகளை வைத்திருக்கும் கிடங்குகளை நிர்வாகம் செய்யவும், டெலிவரி செய்யவும் புதிதாக 1 லட்சம் ஊழியர்களைப் பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க மக்கள்
இந்தியாவைப் பேலவே அமெரிக்காவிலும் பாதுகாப்பான உணவு மற்றும் சுற்றுப்புறம் மற்றும் உடலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் சேனிடைசர் மற்றும் ஆல்கஹால் ஸ்வேப் போன்றவற்றுக்கு அமெரிக்காவிலும் அதிகளவிலான தேவை ஏற்பட்டுள்ளது.
கூடுதல் சம்பளம்
மேலும் அமேசான் நிறுவனத்தில் தற்போது புதிதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கு அமெரிக்க மக்களின் சராசரி சம்பளமான ஒரு மணிநேரத்திற்கு 15 டாலர் உடன் கூடுதலாக 2 டாலரும். அதிக நேரம் பணியாற்றுபவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் சம்பளமும் கொடுப்பதாக அமேசான் அறிவித்துள்ளது.
இதன் மூலம் அமேசானுக்கு 350 மில்லியன் டாலர் கூடுதல் செலவு ஏற்பட உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications