அமெரிக்க வங்கி மற்றும் முதலீட்டுச் சேவை நிறுவனமான சிட்டி குழுமத்தின் வர்த்தகர் ஒருவர் செய்த தவறால், ஸ்வீடன் பங்குச்சந்தை தடாலடியாகச் சரிந்து முதலீட்டாளர்கள் மத்தியில் சில நிமிடங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பங்குச்சந்தைகளில் எப்போதாவது அபூர்வமாக சில தவறுகள் நடக்கும். அப்படி நடக்கும் போது சில நிறுவனங்களின் பங்குகள் அதலபாதாளத்திற்குச் சென்று உடனடியாக தவறு சரி செய்யப்பட்டு பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்.
சில்லறை முதலீட்டாளர்கள்
அப்படி ஒரு நிகழ்வு தான் ஸ்வீடன் பங்குச்சந்தையில் திங்கட்கிழமை நடந்துள்ளது, இதனால் சில்லறை முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் கடுப்பாகியுள்ளனர்.
சிட்டி வங்கி விளக்கம்
சிட்டி வங்கி குழுமம் அளித்துள்ள விளக்கத்தில், "தங்களது ஒரு சந்தை பங்கேற்பாளர் வர்த்தகத்தின் போது செய்த தவறால் சில நிமிடங்களில் பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. அது என்ன தவறு என கண்டுபிடித்து உடனடியாக சரி செய்துவிட்டோம்" என தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது?
ஸ்வீடன் பங்குச்சந்தை குறியீடான ஸ்டோக்ஹோல்ம் OMX -ல் சிட்டி வங்கியின் வர்த்தகர் ஒருவர் செய்த தவறால் 5 நிமிடங்களுக்கு அந்த நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதம், அதாவது 315 பில்லியன் டாலர்கள் வரை சரிந்து சில்லறை முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
நாஸ்டாக்
சிட்டி வங்கியில் ஏற்பட்டது தொழில்நுட்ப கோளாறு அல்ல. எங்களது முதன்மை பணி தொழில்நுட்ப கோளாறுகளைச் சரி செய்வதுதான். அதை தொடர்ந்து இரண்டாவதாக வெளியிலிருந்து வரும் தாக்குதல்களைச் சரி செய்வோம். இப்போது இரண்டையும் நாங்கள் சரி செய்துள்ளோம் என நாஸ்டாக் ஸ்டாக்ஹோம் செய்தி தொடர்பாளர் டேவிட் அகஸ்டசன் கூறியுள்ளார்.
பரிவர்த்தனை
மேலும் சந்தையில் ஏற்பட்ட இந்த தவறுக்கான காரணம் ஒரு சந்தை பங்கேற்பாளரால் செய்யப்பட்ட கணிசமான பரிவர்த்தனை என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாக தெரியவந்துள்ளது. இது கண்டிப்பாகச் சிட்டி குழுமத்திற்குப் பண இழப்பு மட்டுமல்லாமல் நற்பெயருக்கும் சேதத்தை ஏற்படுத்தும்.
விசாரணை
இப்போது இந்த தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையைச் சிட்டி குழுமம் பங்குச்சந்தை குறியீட்டு நிர்வாகமும் செய்து வருகிறது. இந்த தவறு எப்படி ஏற்பட்டது, வருங்காலத்தில் இப்படித் தவறு நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுகள் விசாரணையின் இறுதியில் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications