இந்திய சீனா எல்லை பிரச்சனைக்கு நடுவில் பிளிப்கார்ட்-ல் சீன நிறுவனம் முதலீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போது சீனாவிற்கும் சீன வர்த்தகத்திற்கும் கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் வேளையில், வர்த்தக விரிவாக்கத்திற்காகச் சீன நிறுவனங்கள் பிற முக்கிய நாடுகளில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது.

சீனாவின் முன்னணி டெக் மற்றும் ஆன்லைன் கேமிங் நிறுவனமான டென்சென்ட் தற்போது சிங்கப்பூரில் தனது வர்த்தகத்தையும் முதலீட்டையும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் ஈகாமர்ஸ் வர்த்தகம் செய்து வரும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் டென்சென்ட் முதலீடு செய்துள்ளது.

இந்தியா - சீன எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது, அப்படியிருந்தும் இந்தியச் சந்தையின் வர்த்தகத்தை மறைமுகமாகக் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு பிளிப்கார்ட்-ல் முதலீடு செய்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

 2.5 வருடத்தில் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம்! அதானி கொடுத்த சூப்பர் வாய்ப்பு! 2.5 வருடத்தில் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம்! அதானி கொடுத்த சூப்பர் வாய்ப்பு!

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும் இந்நிறுவனத்தின் சில முக்கிய வர்த்தகப் பிரிவுகள் சிங்கப்பூரிலும், மற்ற பிரிவுகள் இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் ஈகாமர்ஸ் சேவை அளித்து வருகிறது.

பிளிப்கார்ட் தற்போது அமெரிக்க ரீடைல் நிறுவனமான வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தால் பிளிப்கார்ட் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யச் சுமார் 1.2 பில்லியன் டாலர் தொகையைப் பல்வேறு முதலீட்டாளர்கள் உடன் இணைந்து திரட்டப்பட்டு முதலீடு செய்ய உள்ளது.

 

டென்சென்ட்

டென்சென்ட்

இந்த முதலீட்டுச் சுற்றில் வால்மார்ட் உடன் இணைந்து சீன டெக் நிறுவனமான டென்சென்ட் நிறுவனமும் சுமார் 62.8 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்துள்ளது.,

இந்த முதலீட்டு சுற்றின் முடிவில் பிளிப்கார்ட்-ல் வால்மார்ட் 82 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது, டென்சென்ட்-ன் 62.8 மில்லியன் டாலர் தொகை முதலீட்டின் மூலம் பிளிப்கார்ட் ஏற்கனவே தான் வைத்திருந்த 5 சதவீத பங்குகளை அப்படியே வைத்துள்ளது எனப் பேப்பர்.விசி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

 

முதலீடு தடை

முதலீடு தடை

இந்திய - சீன எல்லை பிரச்சனை காரணமாக இந்தியாவில் தற்போது சீன முதலீடுகளுக்கு அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், சிங்கப்பூரில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்காகத் திரட்டப்பட்ட முதலீட்டில் சீனாவின் டென்சென்ட் முதலீடு செய்துள்ளது இந்திய வர்த்தகச் சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பல்வேறு வரிச் சலுகைகள் இருக்கும் காரணத்தால் இந்தியாவில் இருக்கும் பல ஸ்டார்ட்அப் யூனிகார்ன் நிறுவனங்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு வர்த்தகம் செய்து வருகிறது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது சீனாவின் டென்சென்ட்

டென்சென்ட் விரிவாக்கம்

டென்சென்ட் விரிவாக்கம்

கடந்த 5 மாத காலத்தில் சீனாவின் டென்சென்ட் நிறுவனம் இந்தியாவில் கடுமையான வர்த்தக எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், சிங்கப்பூரில்-ஐ தொடர்ந்து மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் வர்த்தக விரிவாக்கம் செய்யப் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.

 பிற சீன நிறுவனங்கள்

பிற சீன நிறுவனங்கள்

டென்சென்ட் நிறுவனத்தைப் போலவே அலிபாபா, பையிட்டான்ஸ் ஆகிய நிறுவனங்களும் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart got fresh investments from china's Tencent: Amid border issues

Flipkart got fresh investments from china's Tencent: Amid border issues
Story first published: Wednesday, September 16, 2020, 17:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X