டெல்லி: முன்னதாக பல கோடி ரூபாய் நிதியினை ஏழை மக்களுக்காக ஒதுக்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யாருக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்பதை தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் இந்தியா தற்போது 21 நாள் லாக்டவுனில் இருந்து வருகிறது.
இதனால் வேலைக்கு செல்லும் மக்கள் முதல் கொண்டு தொழிலதிபர்கள் வரை அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அடிப்படை தேவைக்குக்கு கூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
இதனால் விரைவில் அரசிடம் இருந்து தகுந்த நிதியினை ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் பல தரப்பிடம் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு & முதியோர்களுக்கு
மேலும் முதியோர் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு என சிறப்பு நிதி உதவியாக மாதம் 1000 ரூபாய் அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதே போல் பெண்களுக்கான ஜன் தன் வங்கிக் கணக்கில் மாதம் 500 ரூபாய் செலுத்தப்படும் என்றும், இது அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
சுய உதவி குழுக்களுக்கு நிதி
இது தவிர சுய உதவிக்குழுக்கள் மூலம் 20 லட்சம் அளவுக்கு பினை இல்லா கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது முன்னர் 10 லட்சம் என்ற அளவிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இந்த திட்டத்தின் மூலம் 7 கோடி குடும்பங்கள் பயன் அடையும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு சலுகை
இதெல்லாவற்றையும் விட அன்றாட கூலித் தொழிலாளர்களான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், கட்டுமானம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுகான நல நிதியை பயன்படுத்தும் வகையில் மாநில அரசுகளூக்கு 31,000 கோடி ரூபாய் நிதியினை பயன்படுத்துமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications