இந்தியாவில் அதிகச் சம்பளம் கொடுக்கப்படும் துறைகளில் முதல் இடத்தில் இருக்கும் டெக் துறையில் CXO பிரிவில் இருக்கும் அதிகாரிகளுக்கு அதிகப்படியான சம்பளம் கிடைக்கும்..
இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்பதால், இப்பிரிவை தாண்டி எந்தப் பிரிவில்.. யாருக்கு அதிகம் சம்பளம் அளிக்கப்படுகிறது என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
டெக் துறை
டெக் துறையில் அதிகப்படியான டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் சேவை அதிகரித்துள்ளதால், பல புதிய பிரிவுகள் உருவாகியுள்ளது, இதனால் டெக் துறையில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. ஓரே நேரத்தில் பல துறையில் டிமாண்ட் அதிகமாகியுள்ள நிலையில் சில முக்கியமான பிரிவில் திறமையான ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படுகிறது.
OTT தளங்கள்
தற்போது சந்தை நிலவரத்தின் படி OTT தள நிறுவனங்கள் 10 வருடத்திற்கும் அதிகமான அனுபவம் கொண்ட frontend தொழில்நுட்ப அதிகாரிகளுக்குத் தான் அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இண்டர்நெட் சேவை நிறுவனத்தில் 6-10 வருட அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கும், food tech பிரிவில் இருக்கும் 2-5 வருடப் பணி அனுபவம் கொண்ட இளம் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படுகிறது.
ஈகாமர்ஸ்
இதேபோல் துறை வாரியாகப் பிரித்தால் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் backend tech பிரிவில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதேபோல் பின்டெக் பிரிவில் டேட்டா சைன்டிஸ்ட், குவிக் காமர்ஸ் பிரிவில் ஆப் டெவலப்பர்-களுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படுகிறது.
டேட்டா சையின்ஸ்
மேலும் பைதான் மொழியைக் காட்டிலும் டேட்டா சையின்ஸ் அதிகளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது, மொபைல் பிரிவில் Android, frontend framework பிரிவில் React, frontend மொழிகள் பிரிவில் HTML மற்றும் CSS அதிகப்படியான ஆதிக்கம் செலுத்தி வருகிறது என Instahyre தரவுகள் காட்டுகிறது.
அதிக டெக் வல்லுனர்கள்
இந்தியாவில் அதிக டெக் வல்லுனர்கள் இருக்கும் நகரமாகப் பெங்களூர் விளங்குகிறது, கொரோனா தொற்றுக்குப் பின்பு 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அதிகப்படியான டெக் வல்லுனர்கள் உருவாகியுள்ளனர். இதனால் கோவை, மதுரை, புனே, இந்தூர், அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளிலும் டெக் வல்லனர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.