சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு எது தெரியுமா? அது இந்தியா தான். இது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக இந்தியா தான் முன்னணி வகித்து வருகிறது.
சொல்லபோனால் கடந்த 2018 - 19ம் ஆண்டில் மட்டும் 1.25 கோடி டன் அரிசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு சுமார் 7.75 பில்லியன் டாலர் மதிப்பிலான அரிசியை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிலும் இந்தியாவில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யும் ஈரானில், தற்போது பதற்றமான நிலை நிலவி வருகிறது. அதிலும் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் செலுத்தும் திறனைக் கொண்டிருப்பதால் ஈரானுக்கு பிரிமியம் பாசுமதி அரிசியை அனுப்ப இந்திய வர்த்தகர்கள் இடையே தயக்கமான நிலை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி செய்யும் ஒரு தானிய ஏற்றுமதியாளரின் ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கூர்மையான வீழ்ச்சிக்கு பங்களித்ததாக வர்த்தக மற்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் அரிசி ஏற்றுமதி ஏப்ரல் - நவம்பர் 2019 வரை 5.5 மில்லியன் டன்னாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. இதே முதல் எட்டு மாதங்களில் முந்தைய ஆண்டில் 7.5 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியின் மதிப்பு 19% வீழ்ச்சி கண்டு 3.8 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 4.7 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஈரானுக்கு ஏற்றுமதி செய்யும் பாசுமதி அரிசி கடந்த எட்டு மாதங்களில் வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் 6,00,000 டன்னாக ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டு இதே காலங்களில் 9,00,000 டன்னாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்றுமதி ஓரளவுக்கு இருந்தாலும், ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு பணம் தாமதமாக கொடுப்படுவதாக கூறப்படுகிறது. இது இந்திய வர்த்தகர்கள் இடையே மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவித புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இனி ஏற்றுமதி அதிகரிக்கும் என்று நாங்கள் நம்பவில்லை என்றும் ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பணம் செலுத்துவதும் கடினமாக உள்ளதால், இது எந்த அளவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆக நாங்கள் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று அகில இந்தியா நெல் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நாத்தி ராம் குப்தா ராய்ட்டர்ஸிடன் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னை, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்!! அப்போ வீட்டு உபயோக சிலிண்டர் நிலைமை?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது இந்திய ரூபாய் மதிப்பு!! ஈரான் போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு புது சிக்கல்!!

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!



Click it and Unblock the Notifications