விமானம், ரயில்கள், பேருந்துகளில் பயணம் செய்யும் போது உணவு கட்டணம் அதிகமாக இருக்கும்.
அது பற்றி பலேறு சமயங்களில் செய்திகள் வெளியாகினாலும் அரசு என்ன தான் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னாலும் அதில் பெரிதாக மாற்றம் ஏதுமில்லை.
அப்படி தான் சமீபத்தில் சதாப்தி ரயிலில் சென்ற பயணி ஒருவருக்கு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
டீ விலை
பால் கோவிந்த் வர்மா என்பவர் தனது டிவிட்டர் பதிவில், "டெல்லி - போபால் இடையில் செல்லும் சதாப்தி ரயிலில், டீ 20 ரூபாய் எனவும், அதற்கு வரி 50 ரூபாய் எனவும் குறிப்பிட்டு இருந்தது வைரலானது.
சேவை கட்டணம்
அந்த டிவிட்டர் பதிவுக்கு விளக்கம் அளித்த பலர், அது வரி இல்லை. டீ வழங்கியதற்கான சேவை கட்டணம் என தெரிவித்தனர். ஆனால் 20 ரூபாய் டீ வழங்கு 50 ரூபாய் சேவை கட்டணமா என்பது பலரது கேள்வியாக உள்ளது.
பதஞ்சலி
ஒரு டிவிட்டர் பயனர், சேவை கட்டணம் வரி இல்லை. அது நிறுவனத்துக்கானது. பதஞ்சலி கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும் இதை நம்மால் பார்க்க முடியும். ஐஆர்சிடிசி ஒரு அரசு நிறுவனம். அது சேவை கட்டணம் வசூலித்துள்ளது. அவர்கள் மக்கள் பணத்தை சேவை என்ற பெயரில் சுரண்டி வருகிறார்கள். நல்ல வேளை நீங்கள் இதை டிவிட்டரில் பகிர்ந்துள்ளீர்கள் என தெரிவித்து இருந்தார்.
ஐஆர்சிடிசி விளக்கம்
சேவை கட்டணம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஐஆர்சிடிசி, இந்தியன் ரயில்வே 2018-ம் ஆண்டு வெளியிட்டுள்ள சுற்று அறிக்கையின் படி ரயில் டிக்கெட் புக் செய்யும் போது உணவை சேர்த்து புக் செய்ய வேண்டும். இல்லை என்றால் பயணத்தின் போது செய்யும் ஆர்டர்களுக்கு 50 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தேவை இருந்தால்
2017-ம் ஆண்டு முதல் ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் விருப்பம் இருந்தால் டிக்கெட் புக் செய்யும் போதே உணவை தேர்வு செய்து பெற்றுக்கொல்லும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் ரயில்களில் உணவு வழங்கப்படாமல் இருந்தது. இப்போது ரயில்களில் உணவு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications